districts

img

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காவல்துறை கொடி அணிவகுப்பு

கோவை, பிப்.8- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, கோவை சிவானந்த காலனியில் காவல் துறை சார்பில், கொடி அணிவகுப்பு செவ் வாயன்று  நடைபெற்றது.  கோவை மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்.19 ஆம் தேதி நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவை சிவானந்த காலனி பகுதியில், காவல் துறை சார்பாக, கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 300க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். சிவானந்தா காலனி  பகுதியில் துவங்கப்பட்ட இந்த அணிவகுப்பு சங்கனூர், ரத்தினபுரி ஆகிய பகுதிகளின் வழியாக சென்று மீண்டும் சிவானந்தா கால னியில் நிறைவடைந்தது.  முன்னதாக, தமிழக அரசு சார்பில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் புதிய எக்ஸ்யூவி கார்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த காவல்  ரோந்து வாகனங்களும், கொடி அணிவகுப் பில் பங்கேற்றது. இந்த அணிவகுப்பு மூல மாக பொதுமக்கள் அச்சமின்றி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை பொதுமக்களுக்கு காவல்துறையினர் ஏற் படுத்தும் விதமாக நடைபெற்று வருவதாக கோவை மாநகர காவல் துறை சார்பில் தெரி விக்கப்பட்டது.