கோவை, ஜன.12- கொரோனா பரவல் காரண மாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந் தது. இதில், சிவில் சர்வீஸ் தேர்வும் உண்டு. வயது வரம்பின் காரண மாக இறுதித்தேர்வை முழு மூச் சோடு தயாராகி எழுத காத்திருந்த வர்கள் தேர்வை எழுத முடியாமல் போனது. தற்போது அவர்கள் அந்த தேர்வை எழுத முடியாத நிலை உள் ளது. ஆகவே, அச்சமயத்தில் விண் ணப்பித்தவர்களுக்கு வயது வரம்பை தளர்த்தி தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அதற்கான உரிய உத்தரவை பிறப்பிக்க வேண் டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பிரத மர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி யுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, பி.ஆர்.நடராஜன் எம்.பி., எழுதியுள்ள கடிதத்தில் தெரி வித்துள்ளதாவது, கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020- 2021 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பல்வேறு போட்டித் தேர்வுகள் பாதிக்கப்பட்டன. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. நாட்டின் முக்கிய போட்டித் தேர்வான சிவில் சர்வீஸ் தேர்வுகளும் (UPSC) அவற்றில் ஒன்று. கோவிட்-19 அலைகள் கடு மையாகப் பரவிய காலத்தில், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கான கடைசி வாய்ப்பில் கலந்து கொள் ளாத ஏராளமான சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் உள்ளனர். இத்தேர்வு களுக்கு தயாராகி வந்தவர்களில், வயதின் காரணத்தால் கடைசி வாய்ப்பை எதிர் நோக்கி இருந்த வர்கள் தேர்வுகள் ஒத்தி வைக்கப் பட்டதால் எழுத இயலவில்லை.
இதுவே கடைசி வாய்ப்பு என்ப தால் முழுத்துடிப்புடனும், மிகுந்த நம்பிக்கையுடனும், தேர்வுக்குத் தயாராகினர். ஆனால், கொரோனா பெருந்தொற்று இவர்களின் கனவு களை தகர்த்துள்ளது. இப்போது எதிர்காலத்தின் உறுதியற்ற தன் மையால் ஏமாற்றத்தில் உள்ளனர். தற்போது அரசு அவர்களுக்கு வயது சலுகை அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைத்துள் ளனர். இந்த கோரிக்கை நியாய மான கோரிக்கை என வலியுறுத்த விரும்புகிறேன். சிவில் சர்வீஸ் தேர் வுகளுக்காக பெரும் முயற்சி எடுத்து நேரம் செலவிட்டு தயாராகி வந்த வர்கள் தேர்வு எழுத இயலாமல் போனதற்கு கொரோனா பெருந் தொற்று காரணமாக அமைந்து விட் டது. கடைசி வாய்ப்பை பயன்படுத் திக் கொள்ள உரிய ஏற்பாடுகளை ஒன்றிய அரசு செய்ய வேண்டும் என் கிற அவர்களின் கோரிக்கை மிக நியாயமானது. இந்த துறையின் அமைச்சராக உள்ள நமது பிரதமர் இந்த இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும், சேவையில் உள்ள ஒட் டுமொத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் 22 சதவிகிதம் பற்றாக்குறையை பரி சீலிப்பதாக நிலைக்குழு கூறியுள் ளது. அத்தகைய பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவ டிக்கை எடுக்க பரிந்துரைத்தது. இந்த நேரத்தில், இந்த பாதிக்கப் பட்ட நபர்களுக்கு கடைசி வாய்ப்பை வழங்குவதன் மூலம், மேலும் சில இளம் பணியாளர்களை சேவைக்கு கொண்டு வர முடியும் என்பதை கவ னத்திற்கு கொண்டு வர விரும்பு கிறேன். ஆகவே, இத்தகையோ ருக்கு, தவறவிட்ட தேர்வை எழுத அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கி றேன் என அதில் தெரிவித்துள்ளார்.