சேலம், செப்.8- தலைவாசல் அருகே அருந்ததி யர் குடியிருப்பு பகுதியில் ரேசன் கடை அமைப்பதில் தீண்டாமை நிகழ் வதாக, ஆட்சியர் அலுவலகத்தில் மக் கள் புகாரளித்தனர். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள மணி விழுந்தான் ஊராட்சி, வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொது மக்கள், ஆதித்தமிழர் பேரவை மாவட் டச் செயலாளர் ஏ.டி.ஆர்.சந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். இதன் பின் அதிகாரியை சந்தித்து புகார் மனு அளித்துவிட்டு செய்தியாளர்க ளிடம் கூறுகையில், வசந்தபுரம் பகுதி யில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றன. தங்களுக்கு இப்பகுதியில் நியாய விலைக்கடை இல்லாததால் மணிவிழுந்தான் பகு திக்கு 3 கிலோ மீட்டர் நடந்து சென்று ரேசன் பொருட்களை வாங்க வேண் டிய சூழ்நிலை உள்ளது. அவ்வாறு சென்றாலும் உரிய பொருட்கள் கிடைப் பதில்லை. இந்நிலையில், வசந்த புரம் பகுதியில் நியாய விலை கடை அமைக்க அனுமதிக்கப்பட்டது. தற்போது கட்டடம் முடியும் தருவா யில் உள்ள நிலையில், அப்பகுதி யைச் சேர்ந்த மாற்று சமூகத்தினர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இப்பகு தியில் பொருட்களை வாங்கக் கூடாது என்று தெரிவித்து, தனியார் இடத்தில் புதிதாக நியாய விலை கடை திறக்க உள்ளனர். மேலும், தற்போது கட்டியுள்ள நியாய விலை கடையை தானியக் கிடங்காகவும் மாற்றி உள்ளனர். எனவே, மாவட்டம் நிர்வாகம் உடனடி யாக நடவடிக்கை எடுத்து ஏற்க னவே, கட்டப்பட்ட நியாய விலை கட் டடத்திலேயே நியாய விலைக்கடை இயங்க நடவடிக்கை எடுக்க வேண் டும். சாதிய வன்மத்துடன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தினர்.