திருப்பூர், ஜூலை 16 - காலநிலை மாற்றத்தால் விவ சாயம் நிலையில்லாததாக மாறி யுள்ளது. இதில் விவசாயத்தை பாது காக்க விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என தமிழக விவசாயி கள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு அணி செயலாளர் இரா. சதீஷ்குமார் கூறி யுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது, உலகம் முழுவதிலும் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றம், இயற்கை யின் பண்பு நலன்களில், நிலம், நீர், காற்று, ஒளி ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. இந்த மாற்றம் மனிதனின் அபரிமித ஆசையினாலும், செயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட பல்வேறு தொழில் புரட்சி இயல்புகளாலும் ஏற்பட்டது. ரசா யன காற்று, வெப்பம், மாசுகளாலும் இயற்கையின் காலநிலையில் கடுமை யான மாற்றத்தை துரிதப்படுத்தி யுள்ளது, எதிர் விளைவை அனைவரும் உணரும்படி தற்பொழுது காட்டத் துவங்கியுள்ளது. பல்வேறு புதிய வெப்ப, வெள்ள மண்டலங்கள் உலகம் முழுவதும் உருவாகியுள்ளது. மேலும் மண் மாற்றம், மழை மாற்றம், காற்று போக்கு நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காற்று, நீர், மண், வெப்பம் போன்ற இயற்கை காரணி களை அடிப்படையாக வைத்து நடக்கும் விவசாய உணவுப் பொருட்கள் உற் பத்தி பெரும் பாதிப்பை கண்டுள்ளது. காலநிலை மாற்றத்தில் விவசாயம் கடுமையான பாதிப்பை சந்தித்து வரு கிறது. குறிப்பிட்ட வெப்ப நிலையில், மழையில், மட்டுமே உற்பத்தி செய்யப் படும் பயிர்களின் சாகுபடி பொய் கின்றன. இந்த இயற்கை மாறுபாடுகளை தாக்குப்பிடிக்க முடியாமல் பயிர்கள் கருகியும், நோய், பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகியும்பெருமளவு விவசாயம் சரிவைக் கண்டு வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக் கப்படுகிறது. இவ்வாறு பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் விவசாயம் நடந்து கொண்டிருக்கிறது. தற்பொழுதைய விவசாய உற்பத்தி நிலையில்லாத கால சூழ்நியில் நடக்கிறது. இப்படியான சூழ்நிலையில் விவசாயிகளுக்கான அடிப்படை விலை யில் பாதுகாப்பு இல்லை, பயிர் இழப் பிற்கு உரிய நிவாரணம் இல்லை, வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லை, விவசாய பொருட்களுக்கு சந்தை விலையும் நிலையில்லை. இவ்வாறு காலநிலை மாற்றத்தில் நிலையில்லாத விவசாயத்தை கொண்டு மக்கள் தொகை பெருக் கத்திற்கான உணவுப் பொருள் தேவையை, நிலையில்லாத விவசா யத்தை நம்பி உற்பத்தி செய்து வழங்கி வருவது விவசாயிகளின் தலை விதியா? விதியை மாற்ற விவசாயிகள் ஒன்றுபடு வோம். விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் நிலையினை அடை வோம். உற்பத்தி விலை பாதுகாப்பை பெறுவோம். அரசுகள் கண்டுகொள் ளாமல் இருப்பது எத்தனை நாட் களுக்கு தான் என்று பார்ப்போம். இங்கி ருக்கும் கல்லையும், மண்ணையும் உட்கொள்ள முடியாது என்றுணர்ந்து விவசாயிகளை பாதுகாக்க அரசு நம்மை தேடி வரும் நாள் வெகு தொலை வில் இல்லை. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.