districts

img

கோபி: வாரச்சந்தை வளாகத்தில் சுகாதார சீர்கேடு

கோபி, நவ. 6- மொடச்சூர் வாரச்சந்தை வளாகத்தில் நகராட்சி குப் பைகளுடன் மருத்துவமனை கழிவுகள் கொட்டப்படுவ தால், அப்பகுதியே சுகாதார சீர்கேடாக உள்ளது. இதன் காரணமாக நோய் தொற்று  பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள தாக மக்கள் குற்றம்சாட்டி யுள்ளனர். கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட் பட்டது மொடச்சூர் வாரச்சந்தை. ஈரோடு மாவட் டத்திலேயே இரண்டாவது பெரிய வாரச் சந்தையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு  வாரமும் சனிக்கிழமை நடைபெறும் மொடச் சூர் சந்தையில், மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி வகைகள் நாட்டு பயிறு வகைகள் மற்றும் கால்நடை வியாபாரம் செய்யப்படு கிறது. ரூ.1 கோடிக்கு அதிகமாக வர்த்தகம் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த சந்தை களில் ஒன்றாக மொடச்சூர் வாரச்சந்தை உள் ளது. இந்நிலையில், இந்த சந்தை வாளாகத் தில், நகராட்சியில் 30 வார்டுகளில் பெறப் படும் குப்பைகளை கொட்டும் வளாகமாக மாற்றி வருகிறது கோபி நகராட்சி. மக்கும் குப்பை, மக்காத குப்பைகள், பிளாஸ்டிக் பாலித்தீன்கள் போன்ற குப்பைகளுடன் தனி யார்  மருத்துவமனையின் மருத்துவ கழிவு களை சேகரித்து இச்சந்தை வளாகத்தில் கொட்டி வருகின்றனர்.  இதனால், வாரச்சந்தை வளாகத்தில் குப் பைகள் மலைபோல் தேங்கியுள்ளது. மேலும், குப்பை கிடங்காக மாறி தூர்நாற்றம் வீசி வரு வதால் நோய்தொற்று பரவும் அபாயம் ஏற் பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த சில மாதங்களாக வாரச்சந்தைக்கு வரும் பொது மக்கள் மற்றும் வியாபாரிகளின்  எண்ணிக்கை யும் குறைந்து வருகிறது. மேலும், தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், மொடச்சூர் வாரச்  சந்தை குப்பை கிடங்கில் நகராட்சி குப்பை களுடன் கொட்டப்படும் மருத்துவமனையின் கழிவுகளால் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு  ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள குடி யிருப்பு பொதுமக்கள் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, மொடச் சூர் பகுதி பொதுமக்களின் நலன்கருதி வாரச் சந்தை வளாகத்தில் குப்பைகள் கொட்டக் கூடாது. கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவு களை உடனடியாக அகற்ற வேண்டும். மொடச் சூர் சந்தை வளாகத்தை நகராட்சி குப்பை கிடங்கு வளாகமாக மாற்றுவதை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என பொதுமக் கள் மற்றும் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.