மாற்றுத்திறனாளிகள் தின விழா
சேலம், டிச.3- உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடை பெற்றது. உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிச.3 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் மாற்றுத்திறனாளிகள் தினம், சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் சனியன்று கொண் டாடப்பட்டது. முன்னதாக, மாற்றுத்திறனாளிகளுக்கு விளை யாட்டு, கலை, இலக்கியம், நடன போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. மேலும், மாற்றுத்திறனாளிகள் நலனில் அக் கறை கொண்டு செயல்படும் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளிகள் ஆகி யோர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். இதையடுத்து மாற் றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத்திறனா ளிக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி, சென்னை சில்க்ஸ் மேலாளர் சங்கர் மற் றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை
சேலம், டிச.3- சேலத்தில் பொறியியல் மாணவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியைச் சேர்ந்த சீமாஷ்ரூபன். இவர் சேலம் மாவட்டம், சூரமங்கலம் பகுதியி லுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரமாகவே மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படு கிறது. இந்நிலையில், நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த மாணவர் திடீரென தனது விடுதி அறைக்குள் சென்று கதவை தாழிட்டுள்ளார். இதனால் பதறிப்போன சக மாணவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து சீமாஷ்ரூபனை மீட்ட மாணவர்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சீமாஷ்ரூபன் பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் காவல் துறையி னர் நிகழ்விடத்திற்கு சென்று மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஒருதலை காதலில் மாணவன் தனது பெற் றோர் மற்றும் நண்பர்களிடம் மனவேதனையில் பேசி வந்ததா கவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
கொண்டை ஊசி வளைவுகளில் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு
கோவை, டிச.3- வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளை ஆளில்லா குட்டி விமானம் மூலம் நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தனர். வால்பாறை - பொள்ளாச்சி சாலையானது மொத்தம் 64 கிலோ மீட்டர் தூரத்தை கொண்டது. இதில் 40 கிலோ மீட்டர் தூரமானது 40 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டு, வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை ஆகும். இதை மாநில நெடுஞ்சாலைத்துறையினர் பராமரித்து வருகின்ற னர். இங்கு பராமரிப்பு பணி மேற்கொள்ள வாகனங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்வதுதான் வழக்கம். இந்நிலை யில், வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி பராமரிப்பு பணியை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டனர். இதன் ஒரு பகுதியாக சாலையை அகலப்படுத்துவது, தேவைப்படும் இடங்களில் சிறு பாலங்கள் கட்டுவது, மண் ஏற்படுவதை தடுப்பது, குறுகலான இடங்களை விரிவு படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள ஆளில்லா குட்டி விமானம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்கள், பேருந்து கள் எளிதில் திரும்பி செல்ல சிரமமாக இருக்கும் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட் டது. இதன்பின் அங்கு மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகளுக்கான மதிப்பீடு தயார் செய்யப்படும் என்றும், வனப்பகுதிக்கு இடையூறு ஏற்படாமல் சாலை பணிகள் நடை பெறும் என்றும் நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
குஜராத்தில் நாளை 2ஆம் கட்ட தேர்தல்
குஜராத், டிச.3- 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு 2 கட்டமாக தேர்தல் நடத் தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தி ருந்தது. அதன்படி முதல் கட்டமாக 89 தொகுதி களில் டிசம்பர் 1 அன்று வாக்குப்பதிவு நடந் தது. இதில் மொத்தம் 63.75 விழுக்காடு வாக்கு கள் பதிவாகியிருந்தது. 2 ஆம் கட்டமாக திங்களன்று (டிச.5) மீத முள்ள 93 தொகுதி களுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. அகமதாபாத், வதோதரா, காந்தி நகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடக்கிறது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி மற் றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத் தம் 833 பேர் களத்தில் உள்ளனர். இந்த தொகு திகளில் ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதையடுத்து, அந்த தொகுதிகளில் தங்கி உள்ள வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகு தேர்தல் நடைபெற உள்ள வாக்குச் சாவடிகளுக்கு வாக்கு எந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அழியா மை உள்ளிட்ட பொருட்கள் பலத்த பாதுகாப் புடன் எடுத்துச் செல்லப்படுகிறது. பதற்ற மான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப் பட உள்ளனர். வருகிற 8 ஆம் தேதி (வியாழக்கிழமை) ஏற்கனவே நடந்து முடிந்த இமாசலப்பிரதே சம் மற்றும் குஜராத் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அன்று பிற்பகல் இந்த 2 மாநிலத்திலும் யார்? ஆட்சியை பிடிப் பார்கள் என்பது தெரியவரும்.
மாநில அளவிலான குதிரை ஏற்றம் போட்டி
சேலம், டிச.3- சேலம் மாநகரம், சிறுமலர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாநில அளவிலான குதிரை ஏற்றம் போட்டி சனியன்று நடை பெற்றது. தமிழகத்தில் குதிரை ஏற்றம் போட்டி தற் போது பல இடங்களில் நடைபெற்று வரு கிறது. மக்களின் ஆர்வம் குதிரை ஏற்றும் போட்டியில் திரும்பி உள்ள நிலையில், தனி யார் அமைப்பினர் சார்பில் மாநில அளவி லான குதிரை ஏற்றம் போட்டி சேலம், சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. 5 வயது முதல் உள்ள மாண வர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து பங் கேற்றனர். குதிரை ஏற்றம் போட்டி மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. நடந்து செல்லுதல், மெதுவாக நடந்து செல்லுதல், ஓடுதல் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் 210 மாணவ, மாணவிகள் பங் கேற்றனர். கொரோனா காலத்திற்கு முன்பு இந்த போட்டிகள் நடைபெற்றது. அதன்பின்பு நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது குதிரை ஏற்றும் போட்டி நடைபெற்றது. மேலும் கடந்த போட்டிகளைக் காட்டிலும் தற்போது போட்டிகளில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும், தேசிய அளவில் அடுத்தகட்ட போட்டிகள் நடை பெற உள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த குதிரை ஏற்றம் சங்கத்தின் மாநிலச் செயலா ளர் சந்துரு தெரிவித்துள்ளார். மேலும், குதிரை ஏற்ற போட்டிகளில் குழந் தைகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக வும், அடுத்த கட்டமாக தேசிய அளவில் குதிரை ஏற்றம் போட்டிகள் நடத்தப் போவதா கவும் சந்துரு தெரிவித்துள்ளார்.
அப்பர் பவானி செல்ல அனுமதி வழங்க கோரிக்கை
உதகை, டிச.3- நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றான அப்பர் பவானி செல்ல வனத்துறை அனுமதிக்க வழங்க வேண்டும் என பொதுமக்கள் உட்பட பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக் கிய சுற்றுலா தலங்களாக உள்ள உதகை, குன்னுார் உள்ளிட்ட பகுதி களை பார்வையிடுகின்றனர். அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் விரும் பும் இடமாக மஞ்சூர் பகுதியில் உள்ள அப்பர் பவானி, பென்ஸ்டாக் காட்சி முனை, குந்தா, கெத்தை, எமரால்டு, அவலாஞ்சி அணைக்கட்டுகள் மற்றும் நீர் மின் நிலையங்கள், அவலாஞ்சி மீன் வளர்ப்பு நிலையம் மற்றும் தமிழக- கேரளா எல்லையில் உள்ள கிண்ணக் கொரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க பெரிதும் ஆர்வம் காட்டி வரு கின்றனர். குறிப்பாக மஞ்சூரிலிருந்து சுமார் 30 கி.மீ துாரம் உள்ள அப்பர் பவானி பகுதியில் இயற்கையோடு ஒன்றியுள்ள காடுகள், பச்சை பசேல் என கண்களுக்கு பசுமையூட்டும் புல் வெளிகள், மனதை கவரும் மடிப்பு மலைகள், மலைகளில் வெள்ளி கீற்று களாய் தவழும் அருவிகள், சாலையில் துள்ளி திரியும் மான்கள் மற்றும் வன விலங்குகளை காண சுற்றுலா பயணி கள் பெரிதும் விரும்புகின்றனர். இதுதவிர மின்சார உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாகவும், மாவட்டத் தில் மிக பெரியதுமான மேல் பவானி அணை உள்ளது. எந்த தடையும் இல் லாமல் சுற்றுலா பயணிகள் அப்பர் பவா னிக்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வனத்துறை தடை விதித்துள்ளது. இதற்காக அப்பர் பவானி செல்லும் சாலையில் 10 கி.மீ. முன்பாக கோர குந்தா என்ற இடத்தில் வனத்துறை சார்பில் சோதனைச்சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அப்பர் பவானிக்கு செல்லும் சுற்றுலா பயணி கள் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். இதனால் சுற் றுலா பயணிகள் அப்பர் பவானியை பார்வையிட முடியாமல். மிகுந்த ஏமாற் றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அப்பர் பவானியில் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது டன், வனத்துறை சார்பில் சூழல் சுற்று லாவை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
தோட்டத்தில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு
சேலம், டிச.3- சேலம், எருமாபாளை யம் அருகே சின்னசாமி என்ப வர் தோட்டத்தில் இறைதேடி மலைப்பாம்பு ஒன்று வந்துள் ளது. இந்நிலையில், சனி யன்று சின்னசாமி தோட்டத் திற்கு சென்றபோது மலை பாம்பபை கண்டு அதிர்ச்சி யடைந்துள்ளார். இதைய டுத்து அவர் உடனடியாக வனத்துறையினருக்கு தக வல் அளித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவ லர் கலைச்செல்வன் மற்றும் வனவர் சுரேஷ் ஆகியோர் , 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பைப் பிடித்து, ஏற்காடு அடிவாரம் பகுதி யில் உள்ள குருவம்பட்டி வனப்பகுதியில் விட்டனர்.
கோவை: ரயில் மோதி வாலிபர் பலி உடல் 50 மீட்டர் தூரம் இழுத்து வந்த சோகம்
கோவை, டிச.3- பீளமேடு, ஆவராம்பாளையம் அருகே 40 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பீளமேடு – வடகோவை இடையே ரயில் தண்டவாளம் செல்கிறது. இதில், ஆவராம்பாளையம் அருகே 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்தார். அவரது உடல் 50 மீட்டர் தூரம் இழுத்து செல்லப் பட்டு, சாலையில் விழுந்தது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ராமன் தலைமையிலான போலீ சார், சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபர் கருப்பு நிற சட்டை, பேன்ட் அணிந்து இருந்தார். அவர் யார் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இதேபோன்று போத்தனூர் ரயில் நிலையம் அருகே 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரயில் மோதி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த போத்த னூர் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் கவிதா தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதன்பின் மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் போலீசார் விசாரித்ததில், அவர் பெயர் அலமேலு (70) என தெரியவந்தது. இந்நிலையில், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அலமேலு சிகிச்சை பல னின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செந்நாய்கள் தாக்கியதில் 30 ஆடுகள் பலி
சேலம், டிச.3- எடப்பாடி அருகே செந்நாய்கள் தாக் கியதில் 30 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றி யத்துக்குட்பட்ட சித்தூர் ஊராட்சி, புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (50). சித்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவ ராக உள்ள இவர், தனது வீட்டு தோட் டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந் நிலையில், சனியன்று அதிகாலையில் வீட்டின் முன்பு கட்டியிருந்த ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் முரு கேசன் வெளியே வந்து பார்த்தபோது, செந்நாய்கள் கடித்துக் குதறியதில் அங்கி ருந்த 3 ஆடுகள் இறந்து கிடந்தது. மேலும், சில ஆடுகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இதுகுறித்து முருகேசன் வருவாய்த் துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்த நிலையில், வருவாய்த் துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கால்நடை மருத்துவர்கள் படுகாயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின் றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் அப்பகுதியைச் சேர்ந்த தங்கராஜ், பழனியப்பன், பெரியண்ணன், சம்பு உள் ளிட்ட விவசாயிகளுக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட ஆடுகளை செந்நாய் கூட்டம் தாக்கி கொன்றது. அதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், செந்நாய்களின் தொடர் வேட்டையால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் மிகுந்த வேத னைக்கு உள்ளாகி வருகின்றனர்.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:47.65/60அடி நீர்வரத்து:723கன அடி
வெளியேற்றம்:1028கனஅடி
அமராவதி அணை நீர்மட்டம்: 89.51/90அடி.நீர்வரத்து:520கனஅடி
போக்சோ கைதி தற்கொலை
நாமக்கல், டிச.3- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. அவரது மகன் மகேஷ் (22). இவர் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி சிறுமியை திருமணம் செய்வ தாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்திச் சென்றார். இது குறித்து வேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் மகேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி பிணை யில் வெளியே வந்த மகேஷ் மனமுடைந்த நிலையில் இருந்தாக கூறப்படுகிறது. அவரது பெற்றோர் வியாழ னன்று வெளியே சென்று விட்டு வீடு திரும்பியபோது மகேஷ் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண் டார். இது குறித்து ஜேடர் பாளையம் போலீசார் வழக் குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரில் இன்று பூப்பந்தாட்ட போட்டிகள்
திருப்பூரில் இன்று பூப்பந்தாட்ட போட்டிகள் திருப்பூர், டிச.3- திருப்பூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகத்தின் சார்பில் இளையோர் மற்றும் மிக இளையோருக்கான மாவட்ட அளவி லான ஐவர் தேர்வு திறன் பூப்பந்தாட்ட போட்டிகள் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு சின்ன சாமி அம்மாள் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் ஞாயிறன்று காலை 4 மணி முதல் 8 மணி வரை நடக்கிறது. இதில் இளையோர் பிரிவில் பங்கேற்க 1-1-2003 அன்றோ அல்லது அதற்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். மிக இளையோர் பிரிவுக்கு 1-1-2007 அன்றோ அல்லது அதற்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். போட்டிகளில் பங்கு பெற விரும்புபவர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ பங்கு பெறலாம். கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் திருப்பூர் மாவட்ட அணியின் சார் பில் மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கு பெற்று விளை யாடலாம். போட்டிகளில் பங்கு பெறுபவர்கள் ஆதார் நகல் மற்றும் வயது சான்று நகல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என திருப் பூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட் டுள்ளது.
ரூ. 63 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
தாராபுரம், டிச. 3- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 63 லட்சத் திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மூலனூர் ஒழுங் குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. 254 விவசாயிகள் பருத்தியை விற்ப னைக்காக கொண்டு வந்திருந்தனர்.அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 10 ஆயிரத்து 319 க்கும், குறைந் தபட்ச விலையாக ரூ. 7 ஆயிரத்து 850 க்கும், சராசரி விலையாக ரூ. 8 ஆயிரத்து 950 க்கும் விலை போனது. மொத்தம் 2142 மூட் டைகள் 730 குவிண்டால் பருத்தி ரூ.63 லட்சத்து 4 ஆயிரத்து 690 க்கும் விற்பனையானது. இந்த ஏலத்தில் 13 வணிகர் கள் பங்கேற்றனர். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப் பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
புதுத்திருப்பூர் பகுதியில் நாளை மின் தடை
திருப்பூர், டிச. 3 - புதுத்திருப்பூர் நேதாஜி ஆயத்தஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வரும் திங்கள்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரி வித்துள்ளார். இதனால் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பச்சாம்பாளை யம், பரமசிவம் பாளையம், பெரியாயிபாளையம், பொங்கு பாளையம், காளம்பாளையம், பழைய ஊஞ்சபாளையம், புது ஊஞ்சபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்க முத்தூர், நல்லாத்துப்பாளையம், வ. அய்யம்பாளையம், ஆயி கவுண் டம்பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி, எஸ் எஸ் நகர், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலை நகர், கணக்கம்பா ளையம் சிட்கோ, பெ.அய்யம்பாளையம் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடைப்படும் என்று கூறப்பட்டுள் ளது.
திருப்பூர் ஐஎம்ஏ கிளை நிர்வாகிகள் தேர்வு
திருப்பூர், டிச. 3 - இந்திய மருத்துவர் சங் கத்தின் திருப்பூர் கிளை நிர் வாகிகள் வெள்ளின்று தேர்வு செய்யப்பட்டனர். இந்திய மருத்துவர் சங்க திருப்பூர் கிளை தேர்தலில் தலைவராக டாக்டர் சரோஜா, அடுத்த ஆண்டுக் கான தலைவர் டாக்டர் பாண் டியராஜன், உதவி தலைவ ராக டாக்டர் செந்தில்குமார், செயலாளராக டாக்டர் ஆனந்த், இணை செயலாள ராக டாக்டர் சரவணகுமார், பொருளாளராக டாக்டர் தங்க பாத்திமா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பெண்ணிடம் ஆபாசமாக பேசிய ரெட் டாக்ஸி ஓட்டுநர் கைது
திருப்பூர், டிச. 3 - திருப்பூரில் ரெட் டாக்சி காரில் பயணம் செய்த பெண்ணிடம் ஆபாசமாகவும், ஒருமை யிலும் பேசிய ரெட் டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டார். அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரி. இவரது மனைவி 29 வயது மதிக்கதக்க வர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அப்பெண் அழகுக்கலை பயிற்சி கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலை யில் சனியன்று காலை கல்லூரிக்குச் செல்வ தற்காக ரெட் டாக்சி அலுவலகத்திற்கு அழைத்து டாக்சி புக் செய்தார். சிறிது நேரத் தில் வீட்டிற்கு ரெட் டாக்சி வந்துள்ளது. டாக் சியை ஓட்டுநர் ரஞ்சித் குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சிறிது தூரம் சென்ற நிலையில் அப்பெண்ணிடம் பேச்சு கொடுத்த ஓட்டுநர் ரஞ்சித்குமார் அவரிடம் ஒருமையில், ஆபாச மாக பேசியதாகவும், கல்லூரி வந்த நிலை யில், அவர் காரை விட்டு இறங்க முடியாதபடி காரின் கதவுகளை லாக் செய்து, மொபைல் நம்பரைக் கொடுத்தால் தான் கதவை திறந்து விடுவேன் என்று கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து சுதாரித்து கொண்ட அந்த பெண் வேறு வழியின்றி தனது கணவரின் தொலைபேசி எண்ணை கொடுத்து விட்டு, கல்லூரிக்குச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து தனது கணவருக்குத் தெரிவித்து விட்டு திருப்பூர் வடக்கு காவல் நிலையத் தில் புகார் கொடுத்தார். வடக்கு காவல் நிலைய போலீசார் ரஞ்சித் குமாரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். ரஞ்சித்குமார் குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறை யில் அடைத்தனர். மேலும் அவரின் காரையும் பறிமுதல் செய்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) காலை நேர தொடர் வகுப்பு
அரசியல் சாசன விழுமியங்களும் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பும் 05.12.2022 திங்கள்கிழமை காலை 6.30 - 7.30 மணி தலைப்பு: அரசியல் சாசனமும், கூட்டாட்சி தத்துவமும் கருத்துரை: எஸ்.கண்ணன்