கோவை, செப்.8- குலத்தொழிலை வலியுறுத்தும் விஷ்வகர்மா யோஜனா திட்டத்தை முன் மொழியும் ஒன்றிய மோடி அரசை கண் டித்து கோவையில் மார்க்சிய, பெரியா ரிய, அம்பேத்கரிய அமைப்புகளின் சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுதந்திர தின விழாவையொட்டி தில் லியில் உரையாற்றிய மோடி, “செப்டம் பர் 17 ஆம் தேதி விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்படும்” என அறிவித்தார். இத் திட்டத்திற்காக 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பி கள், காலணி தைப்பவர், கொத்தனார், கூடை பாய், துடைப்பம் நெய்பவர், பொம்மைகளை செய்பவர்கள், முடி திருத்துபவர்கள், பூமாலைகளை கட்டு பவர்கள், சலவைத் தொழிலாளர், தையல் காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர்கள், கவசம் தயா ரிப்பவர்கள், இரும்புக் கொல்லர்கள் உள்ளிட்ட தொழிலை இத்திட்டத்தில் ஒன்றிய மோடி அரசு முன்வைத்துள் ளது. சாதியை ஒழிப்பது சாதி சார்ந்த சிக் கல்களை ஒழிப்பது என்கிற அரசின் கட மையை மறந்து குலத்தொழிலை ஊக்கு விற்கும் ஒன்றிய மோடி அரசிற்கு எதி ராக போராட்டங்கள் நடைபெற்று வரு கிறது.
செருப்பு தைப்பவர் மகன் செருப் புத்தான் தைக்க வேண்டும் என்கிற சனாதான கருத்தை நடைமுறைப்படுத் தும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கோவை சிவானந்தகாலனி பவர் ஹவுஸ் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, தபெதிக பொதுச்செய லாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை ஏற்றார். இதில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் யு.கே.சிவஞானம், ஆதித்தமி ழர் பேரவை பொதுச்செயலாளர் ரவிக் குமார், திராவிடத் தமிழர் கட்சி தலை வர் வெண்மணி, தமிழ்நாடு ஒடுக்கப்பட் டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் தலை வர் அஷ்ரப் அலி, புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், தமிழ்புலிகள் கட்சி யின் இளவேனில் உள்ளிட்ட தலைவர் கள் கண்டன உரையாற்றினர். முன்ன தாக, ஒன்றிய பாஜக அரசு வலியுறுத் தும் குலத்தொழில் முறையை கண் டித்து, மார்க்சிய, பெரியாரிய, அம்பேத் கரிய அமைப்பை சேர்ந்த ஏராளமா னோர் பங்கேற்று கண்டன முழக்கங் களை எழுப்பினர்.