districts

எம்எஸ்எம்இ தொழிற்துறையை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது

கோவை, டிச.12- சென்னை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய வந்த மத்திய குழு வில் எம்எஸ்எம்இ துறை அதிகாரிகள் இடம்பெறவில்லை என தொழில் துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.  இதுதொடர்பாக தமிழ்நாடு தொழில் துறை மின்நுகர்வோர் கூட் டமைப்பின் தலைமை ஒருங்கிணைப் பாளர்கள் எம்.ஜெயபால், ஜே. ஜேம்ஸ் ஆகியோர் கூறியிருப்பதா வது: சென்னை, திருவள்ளூர், செங் கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்க ளில் மிக்ஜம் புயல் தாக்கம் காரண மாக ஏற்பட்ட தொழில் நெருக்கடி யில் இருந்து மீண்டு வர முடியாமல் தொழில் முனைவோர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் புயல் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு  செய்ய ஒன்றிய அரசால் அனுப்பி  வைக்கப்பட்ட குழுவில் குறு, சிறு, நடுத்தர தொழில் துறை சார்பில்  அதிகாரிகள் யாரும் இடம்பெற வில்லை என்பது அதிர்ச்சி அளிக்கி றது. இந்த 4 மாவட்டங்களிலும் தொழில் துறையினரின் பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் இழப்பை சந்தித்துள்ள நிலையில், தொழில் துறை சார்ந்த நஷ்டத்தை அறிந்து  கொள்ள அதிகாரிகளை அனுப்பா மல் இருக்கும் செயலானது எம்எஸ் எம்இ துறையை ஒன்றிய அரசு புறக் கணிப்பதாகவே கருதத் தோன்று கிறது. எனவே, ஒன்றிய அரசு எம்எஸ்எம்இ தொழில் துறையைப் பாதுகாக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட தொழில் துறையின ரைப் பாதுகாக்க வேண்டும். மேலும் இழப்புகளை நேரில் பார்வையிட  துறையின் செயலரை அனுப்பி வைக்க வேண்டும். அதேநேரம், பாதிக்கப் பட்ட மாவட்டங்களில் உள்ள தொழில் துறையினர் மின்சார கட்டணத்தைச் செலுத்த 2 மாதம் அவகாசம் வழங் குவதுடன், நிலைக்கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும்.  அதேபோல்  பாதிக்கப்பட்ட தொழில் துறையினர்  வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம் வழங்கவும், தொழில் களை சீரமைத்திட குறைந்தபட்ச அவ சரக் கடனாக 20 சதவீதம் வழங்கவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள னர்.