கோவை, நவ.28- பொது விநியோகத் திட்டத்தை ஒன்றிய அரசு தொடர்ந்து பலவீனப் படுத்த முயற்சிக்கிறது. இதனை எதிர்த்து தொடர்ந்து கம்யூனிஸ்டு கள் போராடி ஒன்றிய அரசின் சூழ்ச்சியை தடுத்துக்கொண்டிருக் கிறோம் என தொகுதி நிதியில் புதித தாக கட்டப்பட்ட ரேசன் கடையை திறந்து வைத்த கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் உரையாற்றினார். கோவை மாவட்டம், சர்க்கார் சாம குளம் பேரூராட்சியில் உள்ள கோவில் பாளையம் பகுதியில் ரேசன் கடைக்கு புதிதாக கட்டடம் அமைத்து தர அப் பகுதி மக்கள் பி.ஆர்.நடராஜன் எம்.பி., யிடம் கோரிக்கை விடுத்தனர். இத னையேற்று தொகுதி மேம்பாட்டு நிதி யில் இருந்து ரூ.20 லட்சத்தை ஒதுக் கீடு செய்தார். ரேசன் கடைக்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் புதிய ரேஷன் கடை கட்ட டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செவ்வாயன்று திறந்து வைத்தார். பின்னர், முதல் விற்பனையை துவக்கி வைத்து பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேசுகையில், நாட்டிலேயே பொது விநியோக திட்டம் தமிழ்நாட் டில் சிறப்பாக நடைபெறுகிறது. பொது விநியோகத் திட்டத்தை பல வீனப்படுத்த ஒன்றிய மோடி அரசு முயற்சிக்கிறது. இதுபோன்ற சூழ்ச் சிகள் நடைபெறும்போதெல்லாம் இடதுசாரி கட்சிகள் போராடி முயற் சியை கைவிட வைத்துள்ளோம். பொதுவிநியோக முறை இருந்தால் தான் வெளிச்சந்தையில் அத்தியாவ சிய உணவுப் பொருட்கள் ஓரளவு நியாயமான முறையில் கிடைக்கும். வெளிச்சந்தையை கட்டுக்குள் வைத் திட பொது விநியோக திட்டம் அனை வருக்கும் தேவைப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தில் பலன் பெறா தவர்கள் கூட இதனை ஆதரிக்க வேண் டும். தமிழ்நாட்டில் மகளிர்க்கு ஏராள மான சமூக நலத்திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஏராளமான மகளிர் பயன டைந்து வருகின்றனர் என்றார். முன்னதாக, இந்நிகழ்விற்கு எஸ். எஸ்.குளம் பேரூராட்சி மன்ற தலை வர் நிகழ்விற்கு தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் அபிநயா ஆறுக்குட்டி, திமுக எஸ்.எஸ்.குளம் பேரூர் கழக செயலாளர் சுரேந்திரன், திமுக எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செய லாளர் எஸ்.பி.சுரேஷ், சிபிஎம் எஸ். எஸ்.குளம் செயலாளர் ஆர்.கோபால், எஸ்.எஸ்.குளம் மேற்கு செயலாளர் சண்முக சுந்தரம், மாநகராட்சி 12 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வி.இராமமூர்த்தி, கீரணத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ப.தோ.ராசு (எ) பழ னிச்சாமி, வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜன், மதி முக ஒன்றிய செயலாளர் பாலகுரு சாமி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி யின் வட்டார தலைவர் நாகராஜ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய தலைவர் சுதாகர் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.