சிறு, குறு தொழில் சார்ந்த வளர்ச்சிக்கு எவ்விதமான அறிவிப்பும் இல்லாதது பெரும் ஏமாற்றம் தரும் பட்ஜெட் டாக உள்ளது. இந்த பட்ஜெட்டில் தனி மனித வருமானம் 12 லட்சம் வரை வரி சலுகை அறிவிப்பு என்ப தைத் தவிர சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை, எங்கள் எதிர் பார்ப்பு ஜாப்ஆடர்களுக்கான ஜிஎஸ்டி 5 சதம் அறிவிப்பு இல்லா தது, சர்ப்பாஸ் சட்டம் 180 நாட்க ளுக்கு மாற்றி தர கோரிக்கை ஏற் கப்படவில்லை, சிறு, குறு தொழில் களுக்கான வங்கியில் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் குறைக்க கேட்டதில் அறிவிப்பு இல்லை, தொழில் துறை வழங்கிடும் ஜிடிபி -யில் இருந்து ஒரு சதம் நிதி ஒதுக் கீடு கேட்டு இருந்தோம் அதற்கும் அறிவிப்பு இல்லை, கோவையில் குறுந்தொழில் பேட்டைகள் அமைக்க தனி நிதி ஒதுக்கீடு கேட்டு இருந்தோம் அதற்கான அறிவிப்பும் இல்லை, மொத்தத் தில் இயங்கி கொண்டு இருக்கும் குறு சிறு தொழில் முனைவோர் களின் வளர்ச்சிக்கான எவ்வித அறி விப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக் கிறது என தமிழ்நாடு கைத்தொ ழில் மற்றும் குறுந்தொழில் முனை வோர்கள சங்கத்தின் (டேக்ட்) தலை வர் ஜே.ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்
ஜிஎஸ்டி..?
கோயம்புத்தூர் கம்ப்ரசர் இன்டஸ்ட் ரீயஸ் அசோசியேசன் தலைவர் எம்.ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறு குறு தொழில் களை வரையறை செய்வதற்கான, முதலீடு மற்றும் விற்று முதல் (Tum Over) வரம்புகளை உயர்த்தி அறி விக்கப்பட்டுள்ளது. இனிமேல் ரூ.10 கோடி வரை வணிகம் செய்யும் நிறு வனங்கள் குறு தொழில் பிரிவுக்குள் வரும். ஆனால், இந்தியாவில் 95 சத வீத நிறுவனங்கள் ஆண்டு வணிகம் ரூ.1 கோடிக்கும் கீழேயே உள்ளன. எனவே, குறு தொழில்’ என்ற (Micro) பிரிவுக்கு கீழாக Namo அல்லது Tiny என்ற அடிமட்ட தொழில்பிரிவை கட்டாயம் ஏற்படுத்தவேண்டும். மேலும் எம்எஸ்எம்இ பிரிவுக்கான நிதி ஒதுக்கீடு அதே அளவிலேயே உள்ளது. குறைந்தபட்சம் ரூ.1.5 லட்சம் கோடி நிதிஒதுக்கீடு செய்யவேண்டும். அதே சமயம் ஜிஎஸ்டீ வரிவிதிப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர அறி விப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக் கிறது. ஜிஎஸ்டி சீர்திருந்த கமிட்டி ஒன்றை அமைப்பது, சிறுகுறு தொழில் களின் வளர்ச்சிக்கு, தற்போது மிக வும் அவசியம். தமிழ்நாட்டின் வளர்ச் சிக்கான திட்டங்கள் பற்றிய குறிப்பான அறிவிப்புகள் இல்லாத குறைபாட்டை நிவர்த்தி செய்யப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
கோவையில் ஏஐ மையம்
கொடிசியா தலைவர் கார்த்திகே யன் கூறுகையில், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்ச வரம்பு ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடி யாக உயர்ந்துள்ளது, வாடகை கட்டி டங்களில் உள்ள சிறுகுறு தொழில் களுக்கு டிடிஎஸ் ரூ.6 லட்சம் வரை உயர்த்தியும் ஏற்றுமதிக்கு ரூ.20 கோடி வரை கடன் தருவதாக கூறி யுள்ளனர். இது நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. சிறுகுறு தொழில்களுக்கு முதலீடு அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் ஏற்றும திக்கு ரூ.20 கோடி வரை லோன் வழங்கு வதாக கூறியுள்ளது, என்றார். இந்திய தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் ராஜேஷ் லுண்டு கூறுகையில், மருந்துகளுக்கு வரி சலுகை கொடுத்துள்ளது வர வேற்கத்தக்கது, இந்தியா முழுவதும் 3 ஏஐ மையங்கள் அமைக்கப்படும் என கூறியுள்ளார்கள் அதில் ஒரு மையம் கோவையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள் ளோம், என்றார். தென்னிந்திய பொறியியல் உற் பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமதாஸ் கூறுகையில், இந்த பட் ஜெட்டில் முக்கிய வரவேற்கத்தக்க விஷயங்கள் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும், வரி வட்டி குறைக் கப்படும் என எதிர்பார்த்து இருந் தோம், ஏற்றுமதி கிளஸ்டர், மூலப் பொருள் வங்கி கேட்டிருந்தோம் அவை வரவில்லை, ஜி எஸ் டியில் தவறு திருத்தம் 2 ஆண்டில் இருந்து நான்கு ஆண்டுகளாக மாற்றியுள்ள னர். இது தொழில் வளர்ச்சிக்கு உத வும், ஒட்டு மொத்தமாக வரவேற்கத் தக்க விசயங்களும், ஏமாற்றமும் இந்த பட்ஜெட்டில் உள்ளது, என் றார்.
இந்திய வர்த்தக சபை கோவை செயலாளர் பிரதீப் கூறுகையில் இந்த பட்ஜெட் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தினால் வரவேற் கத்தக்க பட்ஜெட், முதல் முயற்சியாக பேட்டரி சேமிப்பு ஊக்குவிப்பு அறி விப்பு, பேட்டரி சேமிப்பு வளர்ந்து வரும் டெக்னாலஜி அதனை ஊக்குவிக் கும் வகையில் பட்ஜெட் அமைந்திருக் கிறது. நூலுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும், என்றார். ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்ட மைப்பின் செயலாளர் பி.ரவிச்சந்தி ரன் கூறுகையில், தனி நபர் வருமான வரி விலக்கு ரூ.12 லட்சமாக அறி விக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கார்ப்பரேட்களுக்கு வரி உள்ளிட்ட பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரையும் பாதிக் கும் சுங்க கட்டணம் குறித்து ஏதும் சொல்லவில்லை. ரூ.6 லட்சம் வரை டிடிஎஸ் விலக்கு அளிக்கப்பட்டுள் ளது. இருந்தாலும் வருமான வரிச் சட்டத்தை மீண்டும் ஒரு வாரத்தில் தாக்கல் செய்வதாக கூறப்பட்டுள்ளது. தில்லி இடைத்தேர்தலுக்காக அதை தள்ளி வைத்துள்ளனர். அதை அறி விக்கும்போது அதில் உள்ள பிரச்ச னைகள் தெரியவரும். தென்னக ரயில்வே ஆலோச னைக்குழு முன்னாள் உறுப்பினர் கே.என்.பாஷாவிடம் கூறியதாவது, தமிழகத்துக்கென புதிய ரயில், கொங்கு மண்டலம் பயன்பெறும் வகையில் கூடுதல் ரயில் அறிவிப்பு எதுவும் இல்லை. கொரோனா உட்பட பல்வேறு காரணங்களால் நிறுத்தப் பட்ட ரயில் இயக்கம் குறித்த அறிவிப்பு இல்லை. ஈரோடு உட்பட பிரதான ரயில் நிலையங்களை மேம்பாட்டு திட் டம் இடம் பெறவில்லை., ரயில்வே கீழ்நிலை பாலங்களை உயர்மட்ட பாலங்களாக அமைப்பது தொடர் பான அறிவிப்பு இல்லை. (ந.நி)
வெற்று வர்ணனையான பட்ஜெட்
ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட் குறித்து தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங் கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஆர். மது சூதணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்திருப்பதாவது, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டம் உள்ளிட்ட நாடு முழுவதும் 20 க்கும் மேற்பட்ட மாநி லங்களில், தென்னை மரங்களில் கடும் வெள்ளை ஈ தாக்குதல் உள் ளிட்ட பலவகையான புதிய நோய்க ளால் தென்னை மரங்கள் காய்ப்பு இழந்து விவசாயிகள் கடுமையான பாதிக்குள்ளாகி உள்ள னர். இதை தடுக்க உதவ வேண்டிய ஒன்றிய அரசின் நிறுவனமான தென்னை வளர்ச்சி வாரியம் செயலற்று உள்ளது. அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்காமல் புதிதாக விவசாயத்தை நூறு மாவட்டங்களில் ஊக்கபடுத்துதல் என்ற அறிவிப்பு விவசாயிகளை பிரித்து ஆளும் சூழ்ச்சி. மறைமுகமாக விவசாயிகளின் போராட்டத்தினால் வாபஸ் பெறப்பட்ட வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதே ஒன்றிய அரசின் நோக்கமாக உள்ளது. மேலும், விவசாயம் என்பது மாநில வாரியாக வும், பகுதி வாரியாக பயிர் சாகுபடி முறையில் மாறுபடும். அதற்கு மாநில அரசுகள் முலம் செயல்படுத்துவதே சிறப்பாக இருக்கும் எனத்தெரி வித்துள்ளார்.
சிஐடியு ஈரோடு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் கூறியதாவது, ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் தொழிற்சங்கங்களின் கோரிக்கை எதுவும் இடம் பெறவில்லை. குறிப்பாக 44 தொழிலாளர் சட்டங்களில் 15ஐ ரத்து செய்து 29 சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக திருத்தியுள்ளனர். இதனை நாடு முழுவதும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு உரிமையற்ற நிலை ஏற்படும், என்றார்.