districts

img

தூய்மை பணியாளர்களுக்கு சீருடை

கோவை, அக்.29- கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது.  கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்குதல்  மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மாநகர மேயர்  கல்பனா ஆனந்தகுமார் துவங்கி வைத்தார். இந்த நிகழ்வில்  70 தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, குளியல் சோப்பு,  காலணி, துண்டு ஆகியவற்றை வழங்கப்பட்டது. இதேபோல், கோவை மாநகராட்சி முழுவதும் உள்ள   2306 தூய்மை பணியாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.   முன்னதாக, உக்கடம் குளக்கரையில் 250 மரக்கன்றுகள் நடும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.  இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை ஆணையர் மோ. ஷர்மிளா, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, பணிக்குழு தலைவர் சாந்திமுருகன், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் வி.பி.முபசீரா, மாமன்ற உறுப்பினர்கள் உள் ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.