மின்வாரியத்தால் ஏற்படுத்தப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தில் நிபந்தனையற்ற முறையில் ஒய்வூதியத்தை சேர்க்க வலியுறுத்தி, கோபி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஓய்வூதியர் அமைப்பின் சார்பில் தர்ணா நடைபெற்றது. இதில், கிளைத் தலைவர் சி.சம்பத், கௌரவத் தலைவர் பி.கே.பாலசுந்தரம், கிளைச் செயலாளர் எஸ்.ஏ.ராம்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தை வாழ்த்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி பேசினார்.