இந்தியன் எக்ஸ்பிரசும், சேலம் வரதராஜுலுவும்...
சுதந்திரப் போராட்ட காலத்தில், சேலம் டாக்டர் வரதராஜனின் தமிழ்நாடு பத்திரிகை முக்கியமானது. அவரது அஞ்சா நெஞ்சத்தையும் பேச்சுத்திறனையும் பாராட்டிய வ.உ.சி அவரைத் தென்னாட்டு தில கர் என்று அழைத்தார். தமிழ்நாடு பத்திரிகைக்கு முன்பே வரதராஜூலு, திருப்பூரில் பிரபஞ்சமித்திரன் எனும் வார பத்திரிகையை நடத்தி வந்தார். ஒத்துழையாமை இயக்கத்திற்கு அணைபோட முயன்ற மகானம் ஸ்ரீனிவாச சாஸ்திரியாரை, அன்னிய ஏகாதிபத்தியம் தந்திரமாக பயன் படுத்தி வந்தது. அதைக் கண்டு வரத ராஜுலு வருத்தமும் கோபமும் கொண்டார். வயிற்றில் ஏற்பட்ட கோளாறு வாயில் நாற்றத்தை உண்டாக்கு வதை மாற்ற ஜின்டான் மாத்திரையை உட்கொள்வது போல, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தன் வயிற்றுக் கோளாறை மறைத்து வெளிப்பகட்டை காத்துக்கொள்ள சாஸ்திரியை பயன்படுத்துகிறது என்று குறிப்பிட் டார். இந்த செய்திக்குறிப்புக்கு அவரிட்ட தலைப்பு “ஜிண்டான் சாஸ் திரி” தமிழ்நாடு பத்திரிகையின் தலை யங்கங்கள் இந்து. சுதேசி மித்ரன் போன்றவை எடுத்து வெளியிடும் தன்மை கொண்டவை என்பது குறிப் பிடத்தக்கது. இவர்தான் “இந்தியன் எக்ஸ் பிரஸ்” என்ற பெயரில் ஆங்கில பத்தி ரிக்கை நடத்தி வந்தார். அவரிடமிருந்து தான் பத்திரிகையை கோயங்கா விலைக்கு வாங்கினார்.
தியாக பெருவாழ்வு வாழ்ந்த பி.எஸ்.சுந்தரம்
ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்து உள்ள வெள்ளி திருப்பூர் என்பது தான் பி.எஸ்.சுந்தரம் அவர்களின் மூதாதையர் வாழ்ந்த ஊர் ஆகும். பி.எஸ்.சுந்தரத்தின் தாய் பி.எஸ். லட்சுமி அம்மாள் ஒரு தேச பக்தர். 1928 ஆம் ஆண்டு கதர் நிதி திரட்ட தெ னகத்தில் சுற்றுப்பயணம் செய்த காந்தியடி களை, பெங்களூரு அருகே நந்தி மலையில் சுந்தரத்தின் தாய் லட்சுமி அம்மாள் சந்தித் தார். அவர் கையால் நெசவு செய்த கதர் துண் டையும், 15 ரூபாயையும் கதர் நிதிக்காக காந்தி யிடம் அளித்தார். ஆனால் காந்திஜி, இது போதாது, உனது மகன் ஒருவனை தேச சேவைக்காக என்னிடம் கொடு எனக் கேட் டார். அவரது விருப்பப்படி தனது பெரிய மகன் பி.எஸ்.சுந்தரத்தை அவரிடம் ஒப்படைத்தார் லட்சுமி அம்மாள். 1932 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி, திருப்பூரில் சத்தியாகிரக போராட்டம் நடை பெற்றது. அந்தப் போராட்டத்தில் பி.எஸ்.சுந் தரம் தலைமையில் குமரன் என்ற குமாரசாமி, ராமன் நாயர், விஸ்வநாதர் ஐயர் நாச்சிமுத்து கவுண்டர், சுப்பராயன், பொங்காளி முதலி யார், நாச்சிமுத்து செட்டியார், அப்புகுட்டி, நாராயணன் ஆகிய 9 தொண்டர்கள் கலந்து கொண்டனர். இப்போதுள்ள குமரன் சாலையில் திருப் பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு எதிரில் கையில் கொடியுடன் அணிவகுத்து சென்ற தொண்டர்களை சூழ்ந்து கொண்டு போலீசார் கொடூரமான தடியடி தாக்குதலை நடத்தி னர். இதில் குமரன் மண்டை பிளந்து ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்தார். தலைமை யேற்றுச் சென்ற பி.எஸ். சுந்தரத்தை காவல் துறையினர் சூழ்ந்து கொண்டு வெறிகொண்டு தாக்கினர். அவரது உடலில் மொத்தம் 19 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் குமரன் உயிரிழந்து கொடி காத்த குமரன் என்ற தியாகப் பெயரை பெற் றார். அதேசமயம் பி.எஸ்.சுந்தரம் உடல் ஊனம் அடைந்து, காது கேளாதவராக, நடக்க முடி யாதவராக தனது வாழ்நாளின் இறுதிவரை சித்தரவதை உடன் இருந்தார். 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் நாள் தனது 60 ஆவது வயதில் காலமானார். வழிமுறை வெவ்வேறாக இருந்தாலும் நாட்டின் விடுதலை என்பதையே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்வை அர்ப்பணித்த வர்கள், ஏராளமானோர் இந்திய நாட்டிற்காக பாடுபட்டு இருக்கிறார்கள். அத்தனை அவர்க ளின் பி.எஸ்.சுந்தரம் தனித்துவமானவர். அவர் நினைவை இளைய தலைமுறை கற்று உணர வேண்டும்.
போர் குணம் மிக்க தொழிலாளி வர்க்கம்...
குடும்பம், குடும்பமாக அவரது கூட்டங்களில் பங்கேற்றனர். தொழிலா ளிகளின் வாழ்க்கை நிலைமையை சோக மாக சித்தரிக்கும், “காலுக்கு செருப்பும் இல்லை; கால் வயிற்று கூலும் இல்லை” என்ற பாடல் மிகப் பிரபலமா னது இக்காலகட்டத்தில் தான். ஜீவா எழுதி கோவை ராம்தாஸ் பாடிய இப்பா டல் கேட்போரை கண்கலங்கச் செய் யும். ஆனால் அந்த 1930 ஆம் ஆண்டு களில் நடுப்பகுதியில் தொழிலாளிக ளின் உணர்வுக்கேற்ப தொழிற்சங்கம் இல்லாத நிலை இருந்தது. கோவையில் அந்த இடத்தை கைப்பற்றிக் கொண்டு இருந்தவர் வாசுதேவ் என்ற நீதிக் கட்சிக் காரர். தொழிற்சங்க தலைவர் என்ற போர்வையில் இயங்கி வந்த வாசுதேவ், கோவை மில் முதலாளிகளின் செல்லப் பிள்ளை. தொழிலாளிகளின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பது தான் அவ ரது நோக்கம். 1936 ஆம் ஆண்டில் கோவை ஸ்டேன்ஸ் மில் நிர்வாகம் ஆங்கி லேய அரசாங்கம் கூறியபடி வேலை நேரத்தை 10 மணியிலிருந்து 9 மணி நேரமாக குறைக்க மறுத்தது. இதை எதிர்த்து அந்த மில்லின் தொழிலாளி கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். ஆனால், தொழிற்சங்கத் தலைவரான வாசுதேவ், இரண்டு வார காலம் கழித்து தான் அங்கே வந்து, தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும், எனக் கூறி னார். இது தொழிலாளிகளுக்கு அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. விரை வில் அவர் தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, பெரியாரின் நண்பரும், சுயமரியாதை இயக்க ஆதரவாளரும், காங்கிரஸ்காரருமான எஸ்.ராமநாதனை தலைவராக தேர்ந்தெடுத்தனர். சங்கத் தின் பெயரும் கோயம்புத்தூர் மில் தொழிலாளர் சங்கம் எனப் பெயர் மாற்றப்பட்டது. ஆனால், 1937 ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையில் சென்னை மாகாணத் தில் காங்கிரஸ் அமைச்சரவை அமைக் கப்பட்ட போது, எஸ்.ராமநாதன் சுகாதா ரத்துறை அமைச்சர் ஆனார். எனவே அவர் தலைவர் பதவியில் இருந்து விலகி னார். ராஜாஜி தலைமையில் அமைச்ச ரவை அமைந்தது, இது தொழிலாளர்க ளுக்கு இடையில் பெரும் நம்பிக்கையை உருவாக்கியது. நிர்வாகங்களின் அடக்குமுறை, மேஸ்திரிகளின் அட்டூழி யம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் வேலை நிறுத்தங்களில் இறங்கினர். மில் நிர்வாகங்கள் ரவுடி கள் மற்றும் மேஸ்திரிகளை கொண்டு போர்க்குணம் மிக்க தொழிலாளிகள் மீது தாக்குதல் கொடுத்தனர். காளீஸ்வரா மில் நிர்வாகம் கே.ரமணியை வேலை நீக்கம் செய்தது. பாப்பநாயக்கன்பா ளையம் லட்சுமி மில் தொழிலாளிகள் 8 அம்ச கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் இறங்கினர். லட் சுமி மில் முதலாளி குப்புசாமி நாயுடு தனது குண்டர்கள் மூலம் தொழிலாளி கள் மீது தாக்குதல் தொடுத்தார். தொழி லாளிகளுக்கு எப்பொருளையும் விற்கக் கூடாதென கடைக்காரர்களை மிரட்டி னார். இச்சூழ்நிலையில் தான் தங்க ளுக்கு வழிகாட்ட உறுதியான தலைமை தேவை என்று உணர்ந்த தொழிலாளி கள், சென்னையில் தொழிற்சங்க இயக் கத்தை உருவாக்கி வந்த இளம் கம்யூ னிஸ்ட் தலைவர்களை சந்தித்து அவர்க ளிடம் ஆலோசனை பெற முடிவு செய்த னர். கே ரமணி மற்றும் இரண்டு தொழி லாளிகளை சென்னைக்கு அனுப்பினர். அவர்கள் சென்னையில் பி.ராமமூர்த்தி, ஜீவா, ஏ.எஸ்.கே,பி.சீனிவாசராவ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசி வழிகாட்ட வேண்டுமென கோரி னர். அவர்களும் அதையோற்று முதலில் ஜீவாவை கோவைக்கு அனுப்பினர். ஜீவாவின் ஆவேசமிக்க உரைகள் வேலை நிறுத்தத்தில் இறங்கியிருந்த தொழிலாளிகளுக்கு ஆவேசத்தை ஊட் டியது. பீளமேட்டில் நடைபெற்ற கூட்டத் தில் 15 ஆயிரம் பேர் பங்கேற்ற னர். ஜீவாவை தொடர்ந்து பி.ராம மூர்த்தி கோவைக்கு வந்தார், அவர் மாகாண தொழிலாளர் நல அமைச்சர் வி.வி.கிரியையும் அங்கே வரச் செய்தார். போராட்ட வீச்சு, மிக பலமாக இருந்ததால் முன்பு 8 கோரிக்கை களை முன்வைத்த தொழிற்சங்க தலை வர்கள், இப்பொழுது அதை 13 ஆக அதிகரித்தனர். வேறு வழியின்றி நிர்வா கமும் பணிந்தது. இந்த கோரிக்கை களில் மிக முக்கியமானதாக கருதப்பட வேண்டியது தொழிற்சங்கத்தை நிர்வா கம் அங்கீகரிக்க வேண்டும் என்பதா கும். கோவை தொழிலாளி வர்க்கத்தின் இந்த மகத்தான வெற்றியானது செங் கொடி இயக்கத்தை கோவை மண்ணில் தடம் பதிக்க செய்தது அடுத்து வந்த காலங்களில் கம்யூ னிஸ்டுகள் தலைமையிலான தொழிற் சங்க இயக்கம் வரலாறு முன்னே எப்பொ ழுதும் கண்டிராத வர்க்க போராட்டங்க ளுக்கு தலைமை தாங்கி நடத்தியது. தமி ழகத்தில் வர்க்க போராட்டத்தின் தலை வனாக கோவை தொழிலாளி வர்க்கம் எழுந்தது தொழிலாளர்களின் வீர மிக்க போராட்டம் வியக்கத்தக்கதாகும். அளப்பரிய சாதனை என்று அதன் சாதனைகளை கூறிக் கொண்டே போகலாம். அவை ஒவ்வொன்றும் தனி வரலாறாக விரியும்.
போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு முன்னாள் அதிமுக எம்எல்ஏவின் கணவர் கைது
நாமக்கல் ஆக. 14- திருச்செங்கோடு முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன் சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ரூ.50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக செவ்வாயன்று கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் செல்வம்பட் டியை சேர்ந்தவர் எட்டிக்கண் 72. இவர் காதப்பள்ளி கிராமத்தில் பழ னியாண்டியிடம் இருந்து 1983 ஆம் ஆண்டு 5.82 ஏக்கர் நிலத்தை கிரயம் பெற்றுள்ளார். அதன் பின் 2023 திருச் செங்கோடு சீதாராம்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி என்பவரது மனைவி சாந்தி பெயருக்கு எட்டுக் கண், அவரது மனைவி எட்டம்மாள், மகன் வேலுச்சாமி ஆகியோர் நாமக்கல் சார் பதிவாளர் அலுவலகம் மூலம் பவர் ஆப் அட்டர்னி செய்து கொடுத்துள்ள னர். இந்நிலையில், 5.82 ஏக்கரில் 8,400 சதுர அடி நிலத்தை, திருச்செங்கோடு அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன் சரஸ்வதி கணவர் பொன்னுசாமிக்கு விற்பனை செய்து உள்ளார். இதற் கிடையே சில மாதங்களில் சாந்தி உயிரி ழந்த நிலையில், அவரது பெயரில் எட் டிக்கண் பதிவு செய்த பவர் ஆப் அட் டர்னி ரத்தாகிவிட்டது . இதன் மூலம் சட்டப்படி மீண்டும் எட்டுக்கண் பெயருக்கு 5.82 ஏக்கர் நில மும் வந்துவிடும். எட்டிக்கண், எட்டம் மாள் வேலுச்சாமி பெயரில் உள்ள அந்த நிலத்தை முன்னாள் திருச்செங்கோடு எம்எல்ஏவின் கணவர் பொன்னுசாமி, உண்மையான நில உரிமையாளர்கள் புகைப்படத்தை மாற்றி, ஆள் மாறாட் டம் மூலமாக புதிதாக பவர் ஆப் அட் டர்னி செய்து நாமக்கல் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், போலியாக நிலம் பத் திரப்பதிவு மோசடி நடைபெற்றுள்ளது. சார்பதிவாளரும் உடந்தையாக இருந் துள்ளார். தங்களது கைரேகை இல்லா மல் பெயரை மட்டும் பயன்படுத்தி, மோசடியாக 50க்கும் மேற்பட்ட ஆவ ணங்களை தயாரித்து உள்ளதாகவும், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் எட் டிக்கண் வேலுச்சாமி ஆகியோர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில், எட்டிக்கண் மனைவி எட்டம்மாள் இறந்துவிட்ட நிலையில், முன்னால் எம்எல்ஏ கணவர் பொன்னு சாமி, உடந்தையாக செயல்பட்ட அனு ராதா, சந்திரசேகரன், நந்தகுமார், பழ னிச்சாமி, ஆவண எழுத்தாளர் ரவிக் குமார், முருகேசன், ரவிச்சந்திரன் ஆக எட்டு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதில் முதல் குற்றவாளியான பொன்னுசாமி, தலைமறைவாக இருந்த நிலையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப் பட்டு போலீசார் பொன்னுசாமியை தேடி வந்தனர் . இந்நிலையில் திருப்பூரில் தலை மறைவாக இருந்த பொன்னுசாமியை தனிப்படை போலீசார் செவ்வாயன்று கைது செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். ரூ. 50 கோடி ரூபாய் நிலம் மோசடி வழக்கில் முன்னாள் அதி முக எம்எல்ஏ கணவர் கைது செய்யப் பட்டுள்ளது நாமக்கல் வட்டாரத்தில் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடிப்படை வசதிகள் கூட பெறமுடியவில்லை எஸ்டி தொகுதியாக அறிவிக்க வலியுறுத்தல்
தருமபுரி ஆக-14, அடிப்படை வசதிகள் கூட பெறமுடியவில்லை, என தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள வெங்கடதார அள்ளி ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு களை எஸ்டி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை பழங்குடியின மக்கள் வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் கூறுகையில், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்பட்டி வட்டத் தில் பழங்குடி குருமன்ஸ் மக்கள் அதிக அளவில் வசித்து வரு கின்றனர். குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வெங்கடதாரள்ளி ஊராட்சியில் 1100 வாக்குகள் உள்ளன. இதில் 400 வாக்குகள் பழங்குடி குருமன்ஸ் வாக்குகள் உள்ளன. இது வரையிளும் இந்த ஊராட்சியை எஸ்டி மக்களுக்கு ஒதுக்கவில்லை. இத னால் பழங்குடி மக்கள் அடிப்படை உரிமைகளை பெறுவ தற்கு கூட இயலாத சூழல் இருந்து வருகிறது, ஊராட்சி மன்ற தேர்தலில் பொதுப் பிரிவில் வெற்றிபெறும் வளர்ந்த சமூக மக்கள், ஆதிக்க சாதியி னர் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிக்கு அடிப்படை தேவை களை செய்யாமல் புறக்கணித்த வருகின்றனர். பழங்குடி குருமன்ஸ் மக்களின் வாழ்வாதாரம் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளது. வசதி படைத்தவர்களை எதிர்த்து எங்களால் போட்டியிடமுடியவில்லை. இதனால் பழங்குடி மக்கள் அரசு ஒதுக்கும் சாதாரண அடிப்படை உரிமைகள் கூட பெற முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆதிக்க சக்திகளை மீறி போட்டியிட நினைத்தால் சாதி பெயரால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. எனவே, தமிழ அரசு மற்றும் தேர்தல் ஆணையம் வெங்கட தார அள்ளி ஊராட்சி தலைவர் மற்றும் வார்டுகள் 1. 2.3 6. வார்டுகளையும் சேர்த்து பழங்குடியினருக்கு எஸ்டி மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்த கோரிக்கை மனுக்களை அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
கோவை, ஆக. 14- கோவை நகரில் அதிகாலை நேரத்தில் நிலவிய பனிமூட் டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றனர். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக, இந்த இரு மாவட்டங்களுக் கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், செவ்வாயன்று இரவு கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்த நிலையில், புதனன்று அதிகாலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் காணப்பட்டது. வாலாங்கு ளம், பெரியகுளம், குறிச்சி குளம் போன்ற குளங்கள் பனி மூட்டத்தால் ரம்மியமாக காட்சியளித்தன. உக்கடம், செல்வபு ரம், இராமநாதபுரம், பீளமேடு, மசக்காளி பாளையம் உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் நிலவியதால் இதமான சூழல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் தங்களது முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். காலை 7 மணிக்கு பின்னராக பனி மூட்டம் மெல்ல விலகி இயல்பு நிலைக்கு திரும்பியது.