districts

img

வட்டாட்சியரின் அங்கீகாரச் சான்று வேண்டுமாம் ரேசன் பொருள் வாங்க முடியாமல் முதியோர்கள் அலைகழிப்பு

திருப்பூர், நவ. 17- திருப்பூரில் உள்ள ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவா காத வயதானவர்களுக்கு, வட்டாட்சியரிடம் அங்கீகாரச் சான்று பெற்றிருந்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் உடல் நலிவுற்ற, தளர்வ டைந்த, வயதான முதியோர் செய்வதறியாது திகைத்து பொருட்களை வாங்காமல் வெறுங் கையுடன் திரும்பிச் செல்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் ஒவ்வொரு நியாய விலை கடையிலும் 30 லிருந்து 35 குடும்ப அட்டைதாரர்கள் தனிநபர்களாக வயதானவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பொருட்கள் வாங்க சென்றால் பயோமெட்ரிக் முறையில் கைரேகைகள் பதிவாவதில்லை. இத்தகைய சூழ்நிலைகளில் சம்பந்தப்பட்ட கார்டுகள் இடம் கடையில் இருக்கும் நோட் டுப் புத்தகத்தில் கைரேகையை பதிவு செய்தோ, கையெழுத்து பெற்றோ பொருட் கள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் நோட்டில் கைரேகை பதிவு செய்து பொருட் கள் தரக்கூடாது என்று குடிமை பொருள் வழங்கல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.  

கடந்த நவம்பர் 3 அன்று வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத் தில் பயோமெட்ரிக் தவிர பிராக்சி முறையில் கட்டாயமாக பில் போடக்கூடாது என தெரி விக்கப்பட்டது.  எனினும் சில கடைகளில் ஃபிராக்சி முறை யில் பில் போடப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. இவ்வினத்தில் மாவட்ட ஆட்சி யர் அறிவுறுத்தியவாறு பயோமெட்ரிக் முறை யில் மட்டுமே பொருட்கள் வழங்கவும், அங்கீ காரச் சான்று வழங்கப்பட்ட இனங்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கவும் உத்தி ரவிடப்பட்டுள்ளது. தவறும் விற்பனையாளர் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்து ரைக்கப்படும் என திருப்பூர் வடக்கு குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் கூறியுள்ளார்.          மேலும், அங்கீகாரச் சான்று வழங்கப் பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தவிர பிற குடும்ப அட்டைதாரர்கள் எவருக்கும் பிரா க்ஸி பில் அனுமதிக்க கூடாது. அங்கீகாரச் சான்று இல்லாத நபர்களுக்கு பிராக்ஸி பில் இடப்பட்டால் அதற்கு அபராத தொகை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் கடைக்கு வயதானவர்கள் வந்தாலும், விற்பனையாளர்கள் அவர்க ளுக்கு பிராக்சி பில் போடுவதில்லை. பொருள்கள் தருவதில்லை. வட்டாட் சியரிடம் சென்று அங்கீகாரச் சான்று பெற்று வந்தால் மட்டுமே பொருள்கள் வழங்கப் படும் என்று கூறி திரும்ப  அனுப்பி விடுகின்ற னர். இதனால் வயதானவர்கள் செய்வத றியாது திகைத்து,

வெறுங்கையுடன் திரும் பிச் செல்லும் நிலை பரிதாபமாக உள்ளது. அதேசமயம் வட்டாட்சியர் அலுவ லகத்திற்கு சென்று அங்கீகாரச் சான்று பெற வும் அவர்களுக்கு இயலாத நிலை உள்ளது. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம், கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு உபா தைகளுடனும், வயது முதுமையின் காரண மாகவும், வேறு யாரும் ஆதரவாக இல்லாத நிலையிலும் அவர்கள் மிகவும் சிரமப்ப டுகின்றனர். நியாயவிலை கடைகளில் பொருட்கள் விநியோகத்தை ஊழல் இல்லாமல் முறைப் படுத்த வேண்டும் என்பது நியாயமானது தான். ஆனால் அதே சமயம் வயதானவர் களை அலைக்கழிப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். எனவே குடிமை பொருள் வழங் கல் துறையும், மாவட்ட நிர்வாகமும் முதியோ ரின் நிலையை கருத்தில் கொண்டு அவர்க ளுக்கு அங்கீகாரச் சான்று கேட்பதை தவிர்க்க வேண்டும், அவர்களுக்கு மட்டும் பிராக்சி பில் போடுவதற்கு அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் வட்டாட்சியர் அலுவலகத் திற்கு சென்று அங்கீகாரச் சான்று வாங்கு வதற்கு பதிலாக அந்தந்த வட்டாரத்திலேயே ஒவ்வொரு கடைக்கும் உரிய ஒரு நபர் குடும்ப அட்டைதாரர்களை வரவழைத்து அவர்களுக்கான அங்கீகாரம் சான்றிதழை வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பயனா ளிகள் எதிர்பார்க்கின்றனர். மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.