கோவை, ஜன.21- உக்கடம் புல்லுக்காடு பகுதியில் மக்க ளின் நீண்ட கோரிக்கைகளுக்கும், போராட் டங்களுக்கு பிறகு கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட் டிற்கு கொண்டு வர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன்னர். கோவை தெற்கு மண்டலம், கரும்புக் கடை, 86 வார்டு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். தற்போது, உக்க டம் கெம்பட்டி காலனியில் இருந்து சுமார் 300 குடும்பங்கள் இங்கு மறு குடி அமர்த்தப் பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வாழும் இப்பகுதியில் இருக்கக்கூடிய மருத் துவர்களிடம் சென்றால் குறைந்தபட்சம் ரூ.300 முதல் ரூ.500 வரை செலவு ஆகிறது. குடும்பமே காய்ச்சலில் பாதிக்கப்படும் பொழுது அந்தக் நடுத்தர குடும்பங்கள் மிக வும் பாதிப்புக்குள்ளாகிறது. மாலை நேரங்களில் மருத்துவரிடம் கூட்டம் கூட்ட மாக மக்கள் காத்து கொண்டிருக்கிறார் கள். இதைத்தொடர்ந்து பல கட்ட போராட் டங்களுக்கும், கோரிக்கைகளுக்கும் பிறகு, இப்பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பணிகள் துவங்கியது. இதன் கட்டிட பணிகள் முடிந்து பல மாதங்களாகி யும் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் தற் போது வரை திறப்பு விழாவிற்காக காத்து கிடக்கிறது. எனவே, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த ஆரம்ப சுகா தார நிலையத்தை உடனடியாக திறக்க வேண் டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.