உடுமலை, ஆக. 12 - உடுமலை இலக்கிய களத்தின் ஏழா வது தொடர் நிகழ்வாக ஆடித் திங்கள் இலக்கிய நிகழ்வு சனிக்கிழமை உடு மலைப்பேட்டை மீனாட்சி திருமண மண் டபத்தில் ஆசிரியர் முனியப்பன் தலை மையில் நடைபெற்றது. இலக்கியக் களத் தலைவர் செல்லத்துரை வரவேற் றார். சுதந்திர தினத்தை முன்னிட்டு “வேற் றுமையில் ஒற்றுமை” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான உரைவீச்சு நிகழ்வு நடைபெற்றது. இதில் உடுமலை ஸ்ரீ விசா லாட்சி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த முதுகலை பயிலும் மாணவிகள் ம. மீனாட்சி க.சபானா பேகம் உடுமலை அர சுக் கல்லூரி மாணவிகள் இரா.பவித்ரா, மு.ரஞ்சிதம், பெதப்பம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவி ஜா.ஜெனிலியா ஆகியோர் உரை நிகழ்த்தினர். அவர்க ளுக்குப் பரிசாகப் புத்தகங்கள் வழங்கப் பட்டன. அரசு கலைக் கல்லூரி தமிழ்த்து றைப் பேராசிரியர் முனைவர் ந.வேல் மணி, கோவை வழக்கறிஞர் மு.ஆனந்த னின் “கைரதி 377” என்ற சிறுகதைத் தொகுப்பு நூலை அறிமுகப்படுத்தி உரை நிகழ்த்தினார். தமிழ்நாடு அறிவி யல் இயக்க முன்னாள் மாநிலத் தலை வர் பேராசிரியை ச.மோகனா இந்நூல் குறித்து ஏற்புரை ஆற்றினார். இதைத் தொடர்ந்து ஸ்ரீ விசாலாட்சி மகளிர் கல் லூரிப் பேராசிரியர் செடிப் பவுன் கவிக்கோ அப்துல் ரகுமானின் காக் கைச் சோறு நூலில் உள்ள 32 தலைப் புகளில் அப்துல் ரகுமான் பதிவு செய்த கட்டுரைகளைப் பேசி நூலை மதிப்புரை செய்தார். மாணவர்கள் ஜீவிதா வசந்த குமார் ஆகியோர் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரி வித்தனர். கவிஞர் இளையவன் சிவா நன்றி கூறினார்.