districts

img

நகராட்சி பணிகளுக்கு ஒப்பந்த முறையில் ஆட்களை எடுக்க கூடாது உடுமலையில் நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

உடுமலை, பிப்.22- நகராட்சி பணிகளுக்கு ஒப்பந்த  முறையில் ஆட்களை எடுக்க கூடாது  என்று தீர்மானம் நிறைவேற்ற வேண் டும் என நகர்மன்ற கூட்டத்தில் உறுப் பினர்கள் கோரிக்கை வைத்தனர். உடுமலை நகர்மன்ற கூட்டம்  வியாழனன்று நகராட்சித் தலைவர்  மத்தீன் தலைமையில் நடைபெற்றது.  இதில், தலைவர் மத்தீன் பேசுகை யில், நகராட்சியில் தூய்மைப்பணி உட் பட இதர பணிகளுக்கு என்று நான்கு  பிரிவுகளாக 75 நிரந்தர தொழிலாளர் களும், 125 ஒப்பந்த தொழிலாளர்க ளும் வேலை செய்து வருகிறார்கள். கூடுதலாக 30 தொழிலாளர்கள் இருந்தால் மட்டுமே நகரில் வேலை செய்ய முடியும் என்பதால், கூடுதல் தொழிலாளர்களைப் பணிக்கு எடுக்க  வேண்டும் என அரசுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது என்றார்.   இதையடுத்து பேசிய நகர்மன்ற  உறுப்பினர் வேலுச்சாமி, நகராட்சி யில் வேலை செய்ய ஒப்பந்த முறை யில் ஆட்களை எடுக்க கூடாது என்று  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நமக்கு தேவையான ஆட்களை நக ராட்சி நிர்வாகமே எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.  நகரமன்ற உறுப்பினர் அர்ஜீனன் பேசுகையில், நகர்மன்ற அலுவலக வளாகத்தில் செயல்படும் ஆதார் சேவை மையத்தில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், பல நாட்கள் இம்மய்யம் பூட்டி உள்ளது. நகரில் சேகரிக்கும் குப்பைகளை தெருக்களில் எரிப் பதை தடுக்க வேண்டும். தூய்மைப்  பணியாளர்களுக்குத் தரமான உபக ரணங்களை வழங்க வேண்டும். சரி யான இடைவெளியில் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்துகளை அடிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார். இதையடுத்து பேசிய நகர மன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் மற் றும் போக்குவரத்துகளுக்கு இடையூ றாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை  அகற்ற வேண்டும். நகராட்சி அலுவல கத்தில் ஊழியர் பற்றாக்குறையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை சரி  செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்த அதிகா ரிகள், ஆட்கள் பற்றாக்குறை குறித்து  அரசின் கவனத்திற்கு தெரிவித்து  உள்ளோம். தூய்மைப் பணியாளர்க ளுக்கு சுமார் 7.50 லட்சம் மதிப்பில் பொருட்கள் வாங்கப்பட்டு உள்ளது. அனைத்து வார்டுகளும் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆதார் மையத்தில் வசூல் செய்ய வேண்டிய கட்டணம் வெளிப்படையாக வைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித் தார்கள்.