உடுமலை, டிச.2- உடுமலை வட்டார அளவிலான கலைத் திருவிழா உற் சாகத்தோடு நிறைவு பெற்றது. உடுமலையில் வட்டார அளவிலான கலைத் திருவிழா கடந்த நான்கு நாட்களாக உடுமலை தளிரோட்டியுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. உடுமலை ஒன்றிய குழு பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக தாராபுரம் மாவட்ட கல்வி அலுவலர் சிவானந்தன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். நிறைவு நாளான வெள்ளி யன்று ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக் கான நடனம், நாடகம், இசைக்கருவி வாசித்தல் ,இசை வாய்ப்பாட்டு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெற் றன. போட்டிகளை உடுமலைப்பேட்டை வட்டார கல்வி அலு வலர் மனோகரன் துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலு வலர் சரவணகுமார் மற்றும் வட்டார வளமைய மேற்பார் வையாளர் சண்முகம் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேலும் உடுமலை வட்டாரத்தில் இருந்து பள்ளி மாண வர்கள் கிராமிய நடனம், கும்மி நடனம், செவ்வியல் குழு நட னம் ஆகிய பிரிவுகளில் மிகச் சிறப்பாக தங்களது திறமை களை வெளிப்படுத்தினர். நாடகம், இசை கருவிகளை வாசித்தல், மற்றும் வாய்ப்பாட்டு இசை ஆகிய போட்டிகளி லும் தங்களது திறமைகளை மிகச் சிறப்பாக வெளிப் படுத்தினர். உடுமலை சுற்றுவட்டாரத்தில் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பு குழுவில் ஆசிரியர் கள் மேனகா ,இந்திராணி, ஆனந்தி, என் ஜி ஓ சரவணன், தர்ம ராஜ் சாந்தி ஸ்ரீ, மாரிமுத்து ஆகியோர் நடுவர்களாக செயல் பட்டனர்கள். கடந்த நான்கு நாட்களாக சுமார் 1800க்கும் மேற் பட்ட மாணவ, மாணவியர்கள் வட்டார அளவிலான கலைத் திருவிழாவிலே பங்கேற்று சிறப்பித்தனர். ஒவ்வொரு பிரிவி லும் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் பங்கேற்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நிறைவாக ஒருங்கிணைப்புக் குழு கண்ணபிரான் நன்றி கூறினார்.