கார் மோதி வாலிபர் கொலை – 6 பேர் கைது
மே.பாளையம், ஏப்.24- மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் காரை மோதி இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில், காரை பறிமுதல் செய்து ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பெரியநாயக்கன்பாளையம் கஸ்தூரிபாளையத்தைச் சேர்ந்தவர் அருண்பாண்டி (28). இவர், திங்களன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில், அவரது நண்பர்களான அருள் குமார் மற்றும் வசந்தகுமார் ஆகியோருடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வியூ பாயிண்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். செவ் வாயன்று அதிகாலை மூன்று மணியளவில் கோத்தகிரி காட்சி முனைக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கு காரில் வந்த ஒரு கும்பலுக்கும், அருண்பாண்டி மற்றும் இவரது நண்பர்க ளுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைக லப்பு ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் விலக்கி விட்ட நிலையில், பாண்டி மற்றும் நண்பர்கள் தங்களது டூ வீலரில் மீண்டும் தங்களது சொந்த ஊரான பெரியநாயக்கன்பாளையம் நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது மேட்டுப்பாளையம்-கோத்தகரி சாலையில் அரசு வனக்கல்லூரி அருகே சாலையோரம் சற்று நேரம் நிறுத்தி விட்டு பேசி கொண்டிருந்தனர். அப்போது சாலை யோரம் நின்றிருந்த இவர்களுடன் ஏற்கனவே தகராறில் ஈடுபட்ட அந்த கும்பல் அருண்பாண்டி மற்றும் அவரது நண்பர் களை பார்த்ததும் அவர்கள் மீது காரை வேகமாக மோதி விட்டு சென்றுள்ளனர். இதில் அருண்பாண்டி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக பலியானார். அருகிலிருந்தவர்கள் படு காயமடைந்த பாண்டியின் நண்பர்கள் இருவரையும், மேட் டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். தகவலறிந்து வந்த போலீசார் இச்சம்பவத்தில் பலியான அருண்பாண்டியின் சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீசார் பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் மீது காரை விட்டு மோதிய கும்பலை, தனிப்படை அமைத்து தேடி வந்தனர். காயமடைந்த அருண்பாண்டியின் நண்பர்கள் கொடுத்த தகவல் மற்றும் சிசிடிவி கேமாராக்களில் பதிவான காட்சி களை கொண்டு குற்றவாளிகளை தேடி வந்த போலீசார், இச்சம்பவத்தில் ஈடுபட்ட இந்தர்சிங்(45) சுமன்குமார்(29) மோகன்குமார்(29) முகமதுரிஜ்வான் அகமது(19) முகமது காலீம்(26) மற்றும் காரினுள் உடனிருந்த 16 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். இவர்கள் பயணித்த சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்க ளிடம் விசாரணை மேற்கொண்ட மேட்டுப்பாளையம் போலீ சார் பின்னர் இவர்களை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி 5 பேரை கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். 16 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
சொத்து தகராறில் இருவருக்கு கத்திக் குத்து ஒருவர் பலி – மற்றொருவர் கவலைக்கிடம்
சேலம், ஏப்.24- எடப்பாடி அருகே சொத்து தகராறு காரணமாக தந்தை மற்றும் மகன் இருவரையும் அவரது உறவினரே கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் இருப்பாளி ஊராட் சிக்குட்பட்ட செவடனூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக் கும் கோவிந்தன் (45) மற்றும் முருகன் (36) ஆகியோ ருக்கு நீண்ட நாட்களாக வழித்தட பிரச்சனை இருந்து வந்துள் ளது. இதனிடையே கடந்த வாரம் கோவிந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களுக்கு இடையே அமைக்கப்பட்ட கம்பிவேலியில் முருகன் மின்சார இணைப்பு செய்துள்ளார். கோவிந்தனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்ட தாக தெரிகிறது. இதனை அறிந்த கோவிந்தன் அதிர்ஷ்டவ சமாக உயிர் தப்பினார். ஆனாலும் பிரச்சனைக்குரிய வழித்தடத்தில் முருகன் மரங்களை வெட்டி போட்டிருந்ததாகவும், இதனை அப்புறப்ப டுத்த கோவிந்தன் தனது மகன் ஸ்ரீதரனுடன் சென்றபோது, ஆத்திரமடைந்த முருகன் தனது நண்பர்களோடு சேர்ந்து கோவிந்தன் மற்றும் ஸ்ரீதரனை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இருவரும் வலியால் கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு எடப்பாடி அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு கோவிந்தன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த ஸ்ரீதரன் (17) மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீசார் கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான முருகன் மற்றும் அவரது மகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். வழித்தட சொத்து தகராறில் ஏற்பட்ட பங்காளி கள் சண்டடையில், ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மை பணியாளர்கள் சம்பள விவகாரம் நகராட்சி ஆணையர் தலையீட்டால் தீர்வு
நாமக்கல், ஏப். 24 குமாரபாளையத்தில் தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பள விவகாரம் நக ராட்சி ஆணையர் தலையீட்டால் தீர்வு காணப் பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் நிரந்தர தூய்மைப் பணியாளர் கள் தவிர, தற்காலிக தூய்மைப் பணியாளர் கள் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பணி செய்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ஒரு மாதம் சம்பளம் தரப்படவில்லை என புகார் எழுந்தது. இதனால் திங்களன்று தூய்மைப் பணியாளர்கள் ஒரு நாள் பணி புறக்கணிப்பு செய்தனர். இது நகராட்சி ஆணையாளர் குமரன் கவனத்திற்கு தெரியவந்தது. பின்பு அவர் ஒப்பந்ததாரரை அழைத்து பேசி தீர்வு காணபட்டது. இது குறித்து நகராட்சி ஆணை யாளர் குமரன் கூறியதாவது, குமாரபாளை யம் நகராட்சியில் 87 தற்காலிக தூய்மைப் பணி யாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மாதம் சம்பள நிலுவை இருப்பதாக தெரியவந்தது. ஒப்பந்ததாரரை அழைத்து பேசி, சம்பளம் வழங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
விவசாயியை அநாகரிகமாக திட்டிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உறுதி
திருப்பூர், ஏப். 24- திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் விவசாயியை அநாகரீகமாக திட்டிய உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மணிவேல் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதுடன், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். திருப்பூர் தெற்கு உழவர் சந்தை நிர் வாக அலுவலர் மணிவேல். கடந்த 9ஆம் தேதி அன்று விவசாயி கன்னிமுத்துவை ஒருமை யில் அநாகரிகமாக திட்டியது விவசாயி களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 16 ஆம் தேதி அன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பூர் சார் ஆட்சியர் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில் தேர்தல் முடியும் வரை போராட்டத்தை தவிர்க்குமாறும், தேர்தல் முடிந்ததும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து புதனன்று போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் பாது காப்பு சங்கத்தினர் அறிவித்திருந்தனர். விவசாயிகள் திரண்டபோது வேளாண்மை துறை, வேளாண் விற்பனை துறை, வரு வாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட திருப்பூர் தெற்கு உழவர் சந்தை நிர்வாக அலு வலர் மணிவேல் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
தடுப்பணையில் மூழ்கி மூன்று பேர் பலி
கோவை, ஏப்.24- கோவை, தீத்திபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர், பெருமாள் கோவில் பகுதியில் உள்ள முண் டாந்துறை தடுப்பணையில் குளிக்கச் சென்ற போது நீச்சல் தெரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை, பச்சாபாளையம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பிரவீன், கவின், தக்க்ஷன் மற்றும் சஞ்சய் ஆகிய 4 பேர், முண்டாந்துறை ஆறு தடுப்ப ணையில் குளித்து உள்ளனர். 40 அடி ஆழம் உள்ள தடுப் பணையில், தற்போது 15 அடி நீர் உள்ளது. இந்நிலை யில், நீச்சல் தெரியாமல் குளித்த பிரவீன், கவின், தக்ஷன் ஆகிய 3 பேர் நீரில் மூழ்கி இறந்து உள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், 3 பேரின் உடல்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காருண்யா நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பணையில் குளிக்கச் சென்ற போது நீச்சல் தெரியாமல் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குண்டும் குழியுமான கான்கிரீட் சாலையால் அவதி தரமான சாலை அமைத்திட கோரிக்கை
நாமக்கல், ஏப்.24- மூன்று மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட கான்கிரீட் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால் தரமான முறையில் சாலை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் உள்ள பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள், புதிய குடிநீர் குழாய் அமைப்பது, கான்கிரீட் சாலை அமைப் பது, தார் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் கடந்து சில மாதங்களாக நடைபெற்றது. இந்நிலையில் பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 16 ஆவது வார்டு பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புதிதாக கான்கி ரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை தரமற்ற முறையில் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், பத்தாண்டு களுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இங்கு கான்கிரீட் சாலை அமைக் கப்பட்டது. தரமான முறையில் அமைக்கப்படாததால், கான்கி ரீட் சாலையிலிருந்து மண்புழுதி எழுகிறது. வீடுகளில் அதிக அளவு மண், தூசி விழுகிறது. மேலும் வாகனங்கள் அதிகம் சென்று வருவதால் கான்கி ரீட் சாலை பெயர்ந்து உள்ளே உள்ள ஜல்லிக்கற்கள் உள்ளிட் டவை வெளியே தெரிந்து புதிய சாலை தற்போது குண்டும் குழி யுமாக உள்ளது. இது குறித்து வார்டு கவுன்சிலர் மற்றும் நக ராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே காங்கீரிட் சாலையை தரமான முறையில் அமைத்து தர வேண்டும், அல்லது புதிதாக தார் சாலை அமைத்து தர வேண்டும் என்றனர். இது குறித்து, பள்ளிபாளையம் நகராட்சி அதிகாரிக ளிடம் கேட்டபோது, தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு தினங்களில் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மழை வேண்டி நூதன வழிபாடு மழைக்கஞ்சிக்கு அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
மழை வேண்டி நூதன வழிபாடு மழைக்கஞ்சிக்கு அரிசி தானம் பெற்ற பொதுமக்கள் நாமக்கல், ஏப். 24- மழை வேண்டி மழைக்கஞ்சி காய்ச்சும் நூதன வழிபாடு நடத்த குமாரபாளையம் அருகே அரிசி தானம் பெரும் நிகழ்வு நடைபெற்றது. கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில், பொதுமக் கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். வெப்பம் தாங்கா மல் பலரும் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்ற னர். மேலும் நிலத்தடி நீர் குறைந்து, அத்தியாவசிய தேவைக்கு கூட நீர் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. காவிரியில் போதிய நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. அவ்வப்போது குடி நீர் தேவைக்காக தண்ணீர் இரண்டு அல்லது மூன்று நாட்கள் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 50 அடி என்ற அளவில் பல மாதங்களாக நீடித்து வருகி றது. மேலும் கிராமப்புற பகுதியில் கால்நடைகளுக்கு குடிநீர் தேவைக்காக பத்து நாட்கள் கிழக்குக்கரை வாய்க்காலில் தண் ணீர் திறந்து விடப்பட்டது. மழை வருமா? என அனைவ ரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், குமாரபாளையம் அருகே உள்ள குப் பாண்டபாளையத்தில் உள்ள கோட்டைமேடு காளியம்மன் கோவிலுக்கு மழைக்கஞ்சி காய்ச்சும் நூதன வழிபாடு நடை பெறுகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், குமார பாளையம் பகுதியில் மட்டுமின்றி அனைத்து பகுதியிலும் மழை வந்து, குளிர்ச்சி நிலவ வேண்டியும், நிலத்தடி நீர் அதிகரிக்கவும், ஆற்றில் நீர் பெருகி, விவசாயம் செழிக்கவும் வேண்டி, குப்பாண்டபாளையம் பகுதி பெண்கள் சிலர் ஒவ் வொரு வீட்டின் முன்பும் கூடை வைத்துக்கொண்டு பாட்டு பாடி, அரிசியை தானமாக பெறுவார்கள். இந்த அரிசியை பெற்றுக்கொண்டு கஞ்சி காய்ச்சி அப்பகுதியில் உள்ள கோட்டைமேடு காளியம்மன் கோவில், தாமோதர பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் பொதுமக்களுக்கு வழங்குவார்கள். இதனை மழைக்கஞ்சி என சொல்வோம். இத் தகைய வழிபாடு இங்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வரு கிறது என்றனர்.
வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல் தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது
கோபி, ஏப்.24- கோபி அருகே வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த தனியார் நிதி நிறுவன மேலாளர் இருவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த வர் ஸ்ரீதர் என்பவர் தனியார் நிதி நிறுவனத்திடம் இருசக்கர வாகன கடன் பெற்று மாத தவணை செலுத்தி வந்துள் ளார். இதனையடுத்து ஸ்ரீதரின் வாகனம் காணமால் போய்விட் டது. இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனைதொடர்ந்து ஸ்ரீதர் பெற்ற வாகன கடன் தவணை தொகையை செலுத்த வேண்டி தனியார் நிதி நிறுவன ஊழி யர் நடராஜன் என்பவர் ஸ்ரீதரின் வீட்டுக்கு சென்று தகராறு செய் துள்ளனர். இதில் பணம் இல்லையென்று கூறியதால் ஸ்ரீதரின் மனைவின் தாலியை அடகு வைத்து பணம் கொடுக்குமாறு கேட்டு பணத்தை பிடுங்கி சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த ஸ்ரீதர் கோபி மனித சட்ட உதவி மய்யத்தை நாடி தனக்கு நேர்ந்ததை கூறி சட்டப்படி கோபி தனியார் நிதி நிறுவனத்திற்கு அறிவிப்பு அனுப்பியுள்ளார். இத னைபெற்று கொண்ட தனியார் நிதி நிறுவன மண்டல மேலா ளர் கார்த்திக் என்பவர் மனித சட்ட உதவி மய்யத்தின் வழக்கு ரைஞர் சென்னியப்பனை தொலைபேசியில் அழைத்து வழக் குரைஞர் தொழில் மற்றும் நீதிமன்ற நிலை குறித்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வழக்கு ரைஞர் சென்னியப்பன் கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி அலைகழித்து வந்துள்ளனர். இதனைடுத்து திங்களன்று இரவு கொலை மிரட்டல் விடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யாததை கண்டித்து வழக்குரைஞர் மற்றும் அவரது ஆதர வாளர்களுடன் கொலை மிரட்டல் விடுத்த தனியார் நிதி நிறுவ னத்தின் ஊழியர்களிடமிருந்து தனக்கு பாதுகாப்பு வேண்டும் என கூறி காவல் நிலையத்தின் முன்பு உரிய தீர்வு வேண்டி தரையில் அமர்ந்து கொண்டார். இதுகுறித்து வழக்குரைஞர் சென்னியப்பனிடம் துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வாளர் பேச்சு வார்த்தை நடத்தி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் போராட்டத்தை கைவிட்டார். இதனடிப்படையில் செவ்வாயன்று காவல்துறை யினர் தனியார் நிதி நிறுவன மேலாளர்கள் கார்த்தி, நட ராஜ் ஆகிய இருவரை கைது செய்து நீதி மன்றத்தில் நேர்நி றுத்தி சிறையில் அடைத்தனர்.