districts

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சாலை விபத்துகளில் இருவர் உயிரிழப்பு

கோவை, ஜூன் 22- கோவை மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட  சாலை விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை மாவட்டம், ஆலந்துறை அருகே உள்ள மாரி செட்டி வீதியைச் சேர்ந்தவர் சபரிநாதன் (21). இவர் தனது  மோட்டார் சைக்கிளில் கோவை - சிறுவாணி சாலையில் சென்று கொண்டிருந்தார். ஆலந்துறை அருகே வந்தபோது  அந்த வழியாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து  சபரிநாதனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில்  தூக்கி வீசப்பட்ட சபரிநாதன் பலத்த காயம் அடைந்தார். இதைகண்ட அவ்வழியாக சென்றவர்கள், சபரிநாதனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பல னின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆலந்துறை  காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ் வரன்பட்டியை சேர்ந்தவர் நடராஜ் (62). இவர் உத்துகாடு -  ஜோதி நகர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம்  நடராஜ் மீது மோதி விட்டு நிற்காமல்  சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள் ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு நகர காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

மின்தடை அறிவிப்பு

ஈரோடு, ஜூன் 22- சென்னிமலை 110-11 கே.வி. துணை மின் நிலையத் தில் வெள்ளியன்று (ஜூலை 24) மாதாந்திர பராமரிப்புப் பணி கள் நடைபெற உள்ளது. இதனால், பெருந்துறை கோட்டத் தைச் சார்ந்த சென்னிமலை நகர் பகுதி  முழுவதும், பூங்கா  நகர், பாரதி நகா், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக் கல் பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சி பாளையம்,  திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப் பாளையம், இராமலிங்கபுரம், ஓரத்துப்பாளையம், அய்யம் பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப் பிலி, கே.ஜி.வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு மற்றும்  எம்.பி.என்.நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல்  மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறி விக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவித்தும் வேட்பு  மனுத்தாக்கல் நடைபெறவில்லை

அவிநாசி, ஜூன் 22- அவிநாசியில் காலியாக உள்ள ஒன்றிய கவுன்சிலர் இடங் களுக்குச் செவ்வாய்க்கிழமை வரை வேட்பு மனுத்தாக்கல்   நடைபெறவில்லை. தமிழக தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் காலி யாக உள்ள இடங்களுக்கு வரும் ஜூலை 9-ஆம் தேதி தேர்தல்  நடைபெறும் என்றும் ஜூன் 20 முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில்  அவிநாசியில் அய்யம்பாளையம்  ஊராட்சி ஆறாவது வார்டு  உறுப்பினர் பதவிக்கும், ராமநாதபுரம், உப்பிலிபாளையம் ஊராட்சிகள் இரண்டுக்கும் சேர்த்து ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து  தேர்தல்  நடைபெறக் குறைவான நாட்கள் இருந்து வரும் சூழ்நிலை யில் பிரதான கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், இது வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யாத நிலையே  இருந்து வருகிறது.  இதில் சென்ற முறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில்  அதிமுகவைச் சேர்ந்த லோகநாதன் வெற்றிபெற்று உடல்ந லக்குறைவு காரணமாக உயிரிழந்தார். மேலும் திராவிட முன் னேற்றக் கழகக் கூட்டணி சார்பில் கொங்கு நாடு தேசிய மக் கள் கட்சி  இரண்டாவது இடத்தை பிடித்தது.  இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறு கையில் இரண்டு முறை உப்பிலிபாளையம் ஊராட்சியைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர், இந்த  முறை ராமநாதபுரம் ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி  வெற்றி பெற வேண்டுமென அந்த ஊராட்சியைச் சேர்ந்த மக் கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இரண்டு ஊராட்சி களை சேர்ந்த  நபர்களும் அனைத்திந்திய அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம் சார்பாக போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளதாகவும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சியும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு விருப்ப மனு கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்பு

திருப்பூர், ஜூன் 22- தீண்டாமை ஒழிப்பு முன்னணி  திருப்பூர் மாவட்ட 4  ஆவது மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம்,  செவ்வாயன்று மாலை வெள்ளகோவிலில் பி.செல்ல முத்து தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மாநாட்டைச் சிறப்பாக நடத்துவது குறித்து பேசி திட்டமிடப்பட்டது.  மாவட்டத் தலைவர் ஆர்.குமார், மாவட்டச் செயலாளர்  ச.நந்தகோபால், மாவட்டப் பொருளாளர் ஏ.பஞ்சலிங்கம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன், மாவட்டத் துணைச் செயலாளர் சி.கே.கனகராஜ் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.  வரவேற்புக்குழு தலைவராக பி.செல்லமுத்து, செய லாளராக எஸ்.ராதாகிருஷ்ணன், பொருளாளராக கே. பழனிச்சாமி ஆகியோர் உள்ளிட்ட 25 பேர் கொண்ட வரவேற் புக்குழு அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டை விளக்கி காங்கேயம், வெள்ளகோவில்,  முத்தூர் பகுதிகளில் ஊர்க்கூட்டங்களை நடத்துவது என  முடிவு செய்யப்பட்டது.

பள்ளி பேருந்துகள் ஆய்வு

திருப்பூர் ஜூன் 22- பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ஆண்டின் இருமுறை பள்ளி பேருந்து களின் நிலை குறித்து ஆராய்ந்து சான்றிதழ் வழங்க இந்நிலையில் பள்ளி பேருந்துகள் எந்த நிலையில் உள்ளது. முன்பக்க, பின்பக்க, அவசர கதவுகள் நிலை, இருக்கை முதலுதவி வசதி, படிக்கட்டு களின் உயரம், வேக கட்டுப் பாட்டு கருவி உள்ளிட்டவை குறித்து திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து துறை சார் பில் வரும் 25-ந்தேதி திருப் பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் ஆய்வு நடத் தப்படுகிறது.

தோழர் சி.குருசாமி காலமானார்

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் சோமனூர் சி.குரு சாமி (75) புதனன்று திடீர் மாரடைப்பால் காலமானார்.  மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட கோவை மாவட்டத் தின் மாவட்டக்குழு உறுப்பினராகவும், சூலூர் சோமனூர் வட்டார கமிட்டியின் முதல் செயலாளராகவும் சி.குருசாமி செயல்பட்டார். விசைத்தறி தொழிலாளர்களின் உரிமை களுக்காக தொடர்ந்து போராடியவர். தீக்கதிர், செம்மலர் உள்ளிட்ட கட்சியின் ஏடுகளை தொழிலாளர்களிடம் எடுத்து  சென்றவர். தீக்கதிர் நாளேட்டின் முகவராக நீண்ட காலம் பத் திரிகையை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். தோழர்  குருசாமியின் திடீர் மறைவு செய்தியை அறிந்தவுடன் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், சி.பத்மநா பன், எம்.கண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம் மற் றும் கட்சியின் தலைவர்கள் பி.முத்துசாமி, கே.மனோகரன், அஜய்குமார், சூலூர் ஒன்றிய செயலாளர் சந்திரன், தீக்கதிர் கோவை பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், மேலா ளர்கள் கே.அழகப்பன், நெல்சன்பாபு உள்ளிட்ட திரளா னோர் அஞ்சலி செலுத்தினர்.

இணையத்தில் போலி கணக்குகள் - ஆட்சியர் எச்சரிக்கை 

கோவை, ஜூன் 22- கோவை மாவட்டத்தில் உள்ள உயர் அலுவலர்க ளின் புகைப்படங்களுடன் கூடிய  வாட்ஸ் அப் எண் எனக் கூறி கொண்டு, பணமோசடி யில் ஈடுபடுவதாக தெரிகி றது. மேலும், மாவட்ட ஆட்சி யரின் பெயர், புகைப்படத் துடன்  தெரியாத எண்ணில்  இருந்து குறுஞ்செய்தி ஏதே னும் வந்தால் பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம். ஏதேனும் பொய்யான தக வல்கள் வந்தாலும் உடனடி யாக பொதுமக்கள் அரு கில் உள்ள காவல் நிலையத் தில் புகார் தெரிவிக்க வேண் டும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.