districts

குடியரசு துணை தலைவர் பாதுகாப்பிற்கு வந்த காவலர்கள் இருவர் விபத்தில் சிக்கி படுகாயம்

கோவை, மே 20 - குடியரசு துணை தலைவர் பாது காப்பிற்கு வந்த காவலர்கள் இருவர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம டைந்தனர். திருப்பூர் மாவட்டம் பெருமாநல் லூர் காவல் நிலையத்தில் பணி யாற்றி வருபவர்கள் காவலர் கதிர வன் (27) மற்றும் முதல் நிலை காவ லர் கருணாகரன்.    இவர்கள் இருவரும் கடந்த 17 ஆம் தேதி குடியரசு  துணை தலைவர் வருகையையொட்டி, பாது காப்பு பணிக்காக நீலகிரி மாவட்டம் உதகை சென்றுள்ளனர். இதன்பின்னர் வியாழனன்று கோவை கோவில்பா பாளையம் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட காளப்பட்டி நால்ரோட்டிற்கு முதல்வரின் பாதுகாப்புக்காக இருசக் கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்தனர். அப்போது, காளப்பட்டி சாலையில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாக னம் ஒன்று இவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில்,  கருணாகரன் மற்றும்  கதிர வனுக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இவர்களை அப்பகுதியினர் மீட்டு குரும்பபாளையம் பகுதியில் உள்ள  தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்து முதலுதவி சிகிச்சை அளித்த னர். இதன்பின்னர் மேல்சிகிச்சைக் காக கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப் பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, காவலர்கள் மீது மோதிவிட்டு நிற்கா மல் சென்ற வாகனம் குறித்து கோவில் பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.