பொள்ளாச்சி, அக்.15- பொள்ளாச்சி அருகே தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் இரண்டு பெண் யானைகள் உயிரி ழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனங்க ளில் யானை, மான், கரடி, வரையாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட ஏராள மான உயிரினங்கள் வாழ்ந்து வருகின் றன. இந்நிலையில், பொள்ளாச்சி வனச் சரகம், கோட்டூர் பிரிவு பருத்தியூர் உமாண்டி மலை சரகப் பகுதியில் களப் பணியாளர்கள் திங்களன்று ரோந்துப் பணி மேற்கொண்டிருந்தனர். அப் போது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி யில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில், தனியாருக்குச் சொந்த மான விவசாய நிலத்தில் இரண்டு யானைகள் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வனச்சரக அலுவல ருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் பார்க்கவே தேஜா, பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் ஞானபாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்ட னர். இதில், யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து, செவ்வாயன்று உடற்கூராய்வு செய்து, அதே இடத்தில் புதைக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி இரண்டு யானைகள் உயிரிழந்த சம்ப வம் அப்பகுதி மக்கள் மற்றும் வன உயி ரின ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.