districts

கூட்டுறவு வங்கியில் ரூ.1.17 கோடி கையாடல்: இருவர் கைது

நாமக்கல், ஏப்.28- கோக்கலை கூட்டுறவு கடன் சங்கத் தில் ரூ.1.17 கோடி மோசடியில் ஈடுபட்ட 2  பேரை காவல் துறையினர் கைது செய்த னர். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளை யம் ஒன்றியம், கோக்கலை ஊராட்சி யில் கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்  உள்ளது. இதில் 2700க்கும் மேற்பட்ட வர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்கள் அனைவரும் விவசாயி களாக உள்ள நிலையில், வங்கியில் வரவு - செலவு வைத்து தங்களது பணத்தை டெபாசிட் செய்தும் வைத் துள்ளனர். அவ்வாறு வைத்திருந்த பணத்தை அவர்களது கவனத்திற்கு வராமலேயே வங்கியில் வேலை செய்த  எழுத்தர் சி.பெரியசாமி, வங்கி செயலா ளர் ஏ.பெரியசாமி ஆகியோர் சுமார் ஒரு  கோடி ரூபாய்க்கு மேல் மோடி செய்ததா கக்கூறி, விவசாயிகள் வங்கி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை சமாதானப்படுத்திய கூட்டு றவுத்துறை அதிகாரிகள் 100 நாட்களுக் குள் அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து, அவரவர் கணக்குகளில் எவ் வளவு மோசடி நடைபெற்றிருக்கிறது என்று கணக்கெடுத்து திருப்பி தருவ தாக உத்தரவாதம் அளித்தனர். அதன டிப்படையில் விவசாயிகள் அமைதி யாக இருந்த நிலையில், 98 நாட்களாகி யும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் மீண்டும் கடந்த மார்ச் 21  ஆம் தேதியன்று வங்கியை முற்றுகை யிட்டு, தங்களது பணத்தை உடனடியாக  திருப்பித்தர வேண்டும் என வலியுறுத் தினர்.  இதுகுறித்த தகவலறிந்த கூட்டுறவு  சரக துணை பதிவாளர் கிருஷ்ணன் வங் கிக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தங்களது பணத்தை உடனடியாக திருப்பித் தர  வேண்டும் எனவும், நாட்களை கடத்திச்  செல்வதால் எந்த பலனும் இல்லை என வும் விவசாயிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து 2400 உறுப்பினர்க ளுக்கு சம்மன் அனுப்பியும், 747 பேர் மட் டுமே நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளனர். மீதியுள்ள அனை வரும் நேரில் வந்து வாக்குமூலம் கொடுத்து அவர்களது வாக்குமூ லத்தை சரிபார்த்த பின் தான் உரிய நட வடிக்கை எடுக்க முடியும் என கிருஷ் ணன் கூறியுள்ளார். இதனால் கோபம டைந்த விவசாயிகள் சம்மனை பெற்றுக் கொண்டு வாக்குமூலம் கொடுத்த 747  பேருக்கும் கணக்கை விசாரித்து உடன டியாக பணத்தை திருப்பி தர வேண் டும்; இல்லையெனில் ஆதார் கார்டு, ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சி யரிடம் ஒப்படைக்க போவதாக தெரி வித்தனர். இந்நிலையில், விவசாயிகளின் புகா ரின்பேரில் விசாரனை செய்த கூட்டு றவு துறை அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டதில் ரூ.1 கோடியே 17 லட் சத்து 79 ஆயிரத்து 644 அளவிற்கு முறை கேடு செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளர சுவின் அறிவுரையின்படி, முறைகேடு கள் தொடர்பாக பொருளாதார குற்றப்பி ரிவில் திருச்செங்கோடு துணைப்பதி வாளர் பி.கிருஷ்ணன் புகாரளித்தனார். இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு சங்கச் செயலாளர் ஏ.பெரிய சாமி மற்றும் எழுத்தர் சி.பெரியசாமி ஆகியோரை பொருளாதார குற்றப்பி ரிவு காவல் துறையினர் கைது செய்த னர். மேலும், விவசாயிகளின் பணம் விரைவில் திருப்பி அளிக்கப்படும் என  கூட்டுறவு சங்க அதிகாரிகள் உறுதிய ளித்தனர்.