districts

கூலி பிரச்சனையை சட்ட பிரச்சனையாக மாற்றுவதா - சிஐடியு குற்றச்சாட்டு

ஈரோடு, நவ. 18- கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சுமைப்பணி தொழிலாளர்களின் கூலி உயர்வு கோரிக்கையை பேசி தீர்க்காமல் உரிமை யாளர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாற்ற நினைக்கின்றனர் என சிஐடியு குற்றம் சுமத்தியுள்ளது. இதுகுறித்து ஈரோடு வருவாய் கோட் டாட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாள ருக்கு சிஐடியு மாவட்ட செயலாளர் எச். ஸ்ரீராம், மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன்  ஆகியோர் தலைமையில் கொடுத்த மனு வில் தெரிவித்திருப்பதாவது:  ஈரோட்டில் சுமைப்பணி தொழிலா ளர்களுக்கு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசி யேசனோடு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந் தம் காலாவதியாகி 3 ஆண்டுகள் ஆகிறது. அசோசியேசன் நிர்வாகத்திற்கு கூலி உயர்வு கோரிக்கை வைத்து 3 ஆண்டுகளுக்கு மேலா கிறது. சுமூகமாகப் பேசித் தீர்க்க முன்வர வில்லை. கூலி உயர்வு பிரச்சனையை சுமூக மாகத் தீர்க்க தொழிலாளர்துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறை என அனைத்து அரசு மட்ட அதிகாரிகளிடம் சிஐடியு முறை யிட்டது. அதிகாரிகள் பேசித் தீர்க்க முயற்சி எடுத்தும் அசோசியேசன் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

இந்நிலையில், ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ் ்போர் அசோசியேசனில் அங்கம் வகிக்கும் ஒரு நிறுவனம் விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் பி.லிட் என்னும் லாரி நிறுவனம் ஆகும். இதில் வேலை செய்யும் 8 தொழிலாளர் களுக்கு போனஸ், முன்பணம் கேட்டும் கொடுக்கவில்லை. தீபாவளி முடிந்தும் கூட  ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், இன்னமும் போனஸ் கொடுக்கப் படவில்லை. ஆனால் இதே நிறுவனத்தின் கோவை, சேலம், திருப்பூர் போன்ற கிளைகளில் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் போனஸ் கொடுக்கப் பட்டுள்ளது.   தங்களுக்கு போனஸ் கொடுக்க வேண் டும் என தொழிலாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் செயலாளர்  விஆர்எல் நிறுவனத்தின் போனஸ் பிரச்சனை யில் தலையிட்டு நிர்வாகத்தை தவறாகத் தூண்டிவிட்டு 15.11.2022 செவ்வாயன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்த 8 தொழிலா ளர்களையும் பணி நீக்கம் செய்துள்ளனர். மேலும், வட மாநில தொழிலாளர்களை வைத்து சுமை, ஏற்றி இறக்கும் வேலையில் ஈடுபட வைத்துள்ளனர். 

எவ்வித காரணமுமின்றி பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பணி நீக்கம் செய்யப்பட்டு வேதனையில் உள்ள தொழி லாளர்கள் இதை ஆட்சேபித்த போது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர்.  ஏனெனில் ஈரோட்டில் மிக அமைதியாக சுமை தூக்கும் தொழிலை செய்து வந்த தொழிலாளர்கள் கடந்த 3 ஆண்டுகளாக கூலி  உயர்வு கோரிக்கையை பேசி முடிக்காமல் இழுத்தடித்து வரும் அசோசியேசன் நிர்வா கிகள் விஆர்எல் லாரி ஆபீஸ் பிரச்ச னையை முன்வைத்து ஒட்டுமொத்த தொழி லாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.  எனவே, அவசர அவசியமான பிரச்ச னையாகக் கருதி இதை சுமூகமாக பேசி தீர்ப்ப தற்கு உரிய தலையீடு செய்ய வேண்டுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.