திருப்பூர், பிப்.3 - திருப்பூர் மாநகராட்சியின் எல்லை யில் அமைந்துள்ள மழை நீர் சேமிப்பு குட் டையில், மாநகராட்சி திடக்கழிவு சேகரிக் கும் வாகனத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதற்கு அப்பகுதி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பூர் நெருப்பெரிச்சல் வாவிபா ளையம் அருகிலுள்ள குருவாயூரப்பன் நகர் முதல் 6 கால் சாவடி வரை செல்லும் சாலை அருகில் மழை நீர் சேமிப்பு குட்டை உள்ளது. தற்போது இந்த குட்டை தண் ்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. குருவாயூரப்பன் நகர் கிழக்குப் பகுதியில் 108 வீடுகள் உள்ளன. அதன் அருகிலேயே பள்ளிக்கூடமும் அமைந்துள்ளது. இந்நிலையில் மாநகராட்சி திடக்க ழிவு மேலாண்மை வாகனத்தில் குப்பை களை சேகரித்து வந்து, இங்குள்ள மழை நீர் சேமிப்பு குட்டையில் கொட்டியுள்ள னர். கடந்த வெள்ளியன்று குப்பை கொட்ட வந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை சேர்ந்த வடக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.தன்ராஜ், கிளை உறுப்பினர் ஆர்.செந்தில் உள்ளிட்டோர் தண்ணீர் சேமிக்கும் குட்டையில் குப் பையை கொட்டுவதா என்று எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். ஏற்கனவே குப்பை கொட்டப்பட்ட நிலையில் இரண்டாவது லோடு குப்பை கொட்ட வந்த பொழுது வண்டியின் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சூழ்ந்து தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரி வித்தனர். மாநகராட்சி அலுவலர்கள் மற் றும் மாமன்ற உறுப்பினரிடம் குப்பை கொட்ட கூடாது என்று வலியுறுத்தினர். இது குறித்து, மாநகராட்சி உயர் அதி காரிகளிடம் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக மாநக ராட்சி அலுவலர் மற்றும் மாமன்ற உறுப்பி னர் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த செந் தில் கூறும் பொழுது, மழைநீர் சேமிப்பு குட்டையில் குப்பை கொட்டுவது மட்டு மின்றி, பள்ளிக்கூடத்துக்கு அருகிலேயே கழிவுநீர் தேங்கி இருக்கிறது. அங் கேயே, எஞ்சிய உணவு உள்ளிட்டவை கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற் றம் வீசியதுடன், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. இங்கு படிக்கும் மாண வர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபா யம் உள்ளது. எனவே இப்பிரச்சனையில் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்வ தாக கூறினார்.