தருமபுரி, பிப்.1- கேங்மேன் (பயிற்சி) பணியாளர் களின் கோரிக்கைகளை வலியு றுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் தருமபுரி, கோவை, நாமக்கல் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கேங்மேன் பயிற்சி பணியாளர்க ளுக்கு சொந்த மாவட்டங்களுக்கு விருப்ப இடமாறுதல் விரைந்து வழங்கி விடுப்பு, பயணப்படி சலு கைகள் வழங்கிட வேண்டும். விரி வாக்கப் பணிகள் மட்டும் வழங்க வேண்டும். மின் விபத்தை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்பு உபகரணங் கள் வழங்கி முறையாக பாதுகாப்பு வகுப்பு நடத்த வேண்டும். விடுபட்ட கேங்மேன்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன. தருமபுரி மின்வாரிய மேற் பார்வை அலுவலகம் முன்பு நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் மாவட்ட தலைவர் பி.ஜீவா, தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் டி.லெனின் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் வி.சீனிவாசன் அகியோர் உரையாற்றினர். முடி வில், மாவட்ட துணைத்தலைவர் வி. வெண்ணிலா நன்றி கூறினார்.
நாமக்கல்
நாமக்கல் மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்ஊழியர் மத் திய அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்துக்கு அமைப்பின் திட்ட தலை வர் சவுந்திரராஜன் தலைமை வகித் தார். இதில், திட்ட செயலாளர் கோவிந் தராசு உட்பட பலர் கலந்து கொண் டனர்.
கோவை
இதே கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், கோவையில் மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு கோவை வடக்கு கிளை செய லாளர் மணி தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கோவை மண்டல செயலாளர் மணிகண்டன் கோரிக் கைகள் குறித்து உரையாற்றினார். இதில் சங்கத்தின் நிர்வாகிகள், சாதிக் பாட்சா, கார்த்திகேயன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.