திருப்பூர், டிச.27- திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதி களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப் பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் முயற்சித்து வருவதைக் கண்டித்து பொது மக்கள், வியாபாரிகள், பல்வேறு அரசியல் இயக் கத்தினர் பங்கேற்று கோபாவேச ஆர்ப்பாட் டம் நடத்தினர். திருப்பூர் அவிநாசி சாலையில் ஆதார் மருத்துவமனை அருகிலும், எஸ்ஏபி தியேட் டர் அருகிலும், அங்கேரிபாளையம் பள்ளி அருகிலும், டீச்சர்ஸ் காலனி பகுதியிலும் என பல பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்து வருகி றது. இந்த பகுதிகள் அனைத்தும் போக்கு வரத்து நெருக்கடி மிகுந்த இடங்களாகவும், மருத்துவமனை, பள்ளிக்கூடம், கோயில் கள், பேருந்து நிறுத்தம் என பெண்கள், மாணவ, மாணவிகள், பொது மக்கள் அதி கம் கூடும் பகுதிகளாகவும் உள்ளன. இப் பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டால் சமூக விரோத செயல்கள் அதிகரிக்கவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படவும், விபத்துகள் நடைபெறவும் கூடிய அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே அனைத் துப் பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறப் பதற்கு பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவிநாசி சாலையில் முன்பு திங்களன்று கோபாவேச ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.மைதிலி தலைமை வகித்தார். இதில் மக்கள் நீதி மய்ய மாவட்ட துணைச்செயலாளர் தண்டபாணி, கொங்கு நாடு தேசியக் கட்சி நிர்வாகி சந்தோஷ், பார் வர்ட் பிளாக் நிர்வாகி பாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணே சன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், அவிநாசி சாலை பகுதியில் உள்ள வியாபாரிகள், சுற்று வட்டார பொது மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் இயக்கத் தினர் பெருந்திரளானோர் கலந்து கொண்டு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு எதிராக கண்ட னம் முழங்கினர்.