districts

img

கூலி உயர்வு கேட்டு சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

திருப்பூர், மே 8 – டாஸ்மாக் குடோன்களில் வேலை செய்யும் சுமைப்பணி தொழிலாளர் கள் கூலி உயர்வு கேட்டு கடந்த சனியன்று முதல் வேலை நிறுத்தப்  போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இதன்தொடர்ச்சியாக, திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  தமிழ்நாட்டில் டாஸ்மாக் குடோன் களில் சுமைப்பணி தொழிலாளர் களுக்கு லிக்கர் பெட்டி, பீர் பெட்டி ஆகியவற்றுக்கான சுமை கூலி  பெட்டி ஒன்றுக்கு ரூ.8, பெட்டிக்குள் பெட்டி ஒன்றுக்கு ரூ.9, வெளி நாட்டு மதுபான பெட்டி ஒன்றுக்கு  ரூ.60, குடோன் விட்டு குடோன் மாற் றும்போது பெட்டி ஒன்றுக்கு ரூ.15 வீதம் கூலி வழங்க வேண்டும் என்று  சிஐடியு டாஸ்மாக் குடோன் சுமைப் பணி தொழிலாளர் ஒருங்கிணைப் புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கூலி உயர்வை மதுபான உற் பத்தி ஆலை நிர்வாகங்கள், டாஸ் மாக் நிர்வாகம் மே 5ஆம் தேதி முதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மே 6ஆம் தேதி சனியன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  இதில், சுமை ஏற்றும் வேலையை மட்டும் செய்து வருகின்றனர். மேற் கண்ட அடிப்படையில் கூலி வழங் கும் மதுபான கம்பெனிகளின் பெட்டி களை மட்டுமே இறக்குவோம் என்று சிஐடியு தொழிலாளர்கள் அறி வித்து இப்போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர். இதன்ஒருபகுதியாக, திங்க ளன்று கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர், அங்கேரிபாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் மாநில ஒருங்கிணைப் புக் குழு உறுப்பினர் கார்த்திக்  தலைமை வகித்தார். கோரிக்கை களை வலியுறுத்தி டாஸ்மாக் குடோன் தொழிலாளர்களுடன், வளர்மதி கூட்டுறவு சுமைப்பணி தொழிலாளர்களும் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர். இதில், சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எம்.ராஜ கோபால், மாவட்ட செயலாளர் கே. உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர். கமிட்டி உறுப்பி னர் டி.ஜெயபால் உள்ளிட்ட நிர்வாகி கள், தொழிலாளர் கலந்து கொண்ட னர்.

காங்கேயம்

இதேபோல காங்கேயம் டாஸ் மாக் குடோன் முன்பு சிஐடியு சுமைப் பணி சங்கத் தலைவர் தங்கராஜ் தலைமையில் திங்களன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பி னர் கே.திருவேங்கடசாமி பங் கேற்று கோரிக்கையை ஆதரித்து வாழ்த்திப் பேசினார். இதில் வேலை  நிறுத்தத்தில் பங்கேற்றுள்ள சுமைப் பணி தொழிலாளர்கள் பங்கேற்ற னர்.

கோவை

கோவை மாவட்டம், பீளமேடு டாஸ்மாக் குடோன் முன்பு நடை பெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப் பணி தொழிலாளர்கள் மாவட்ட துணைத்தலைவர் ஜஹாங்கீர் தலைமை வகித்தார். இதில், சுமைப் பணி தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.ராஜன், சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் பொருளாளர் ராமகிருஷ்ணன், சம் மேளன துணைச்செயலாளர் செந் தில் பிரபு உள்ளிட்டோர் உரையாற் றினர். இதில், திரளான சுமைப்பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப் பினர். கிளை பொருளாளர் அபுதா கீர் நன்றி கூறினார்.  டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களின் போராட்டத்தின் காரணமாக கோவையில், மதுபானங்களை ஏற்றி வந்த லாரிகள், சரக்குகளை இறக்காததால் வரிசை கட்டி நிற்கிறது.

நீலகிரி 

நீலகிரி மாவட்டம், குன்னூர் வண்டிச்சோலை மாவட்ட மேலா ளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலா ளர்கள் தலைவர் ரங்கசாமி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சிஐடியு மாவட்ட செயலாளர் சி.வினோத் கோரிக்கையை ளக்கி பேசினார். சிஐடியு மாவட்ட பொரு ளாளர் நவீன்சந்திரன், சிஐடியு டாஸ் மாக் சங்க மாவட்ட தலைவர் ஜெ. ஆல்துரை, செயலாளர் மகேஷ் உள் ளிட்ட திரளானோர் ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில், சுமைப்பணி தொழிலாளர் சங்க நிர்வாகி ரமேஷ் நன்றி கூறினார்.