districts

ஏப்.1 ஆம் தேதியன்று சுங்கச்சாவடிகள் முன்பு ஆர்ப்பாட்டம்

நாமக்கல், மார்ச் 23- சுங்க கட்டண உயர்வை கண் டித்து ஏப்ரல் 1 ஆம் தேதியன்று அனைத்து சுங்கச்சாவடிகள் முன் பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதை கண்டித்தும், கலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும் ஏப்.1 ஆம்  தேதியன்று சுங்கச்சாவடிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த லாரி உரிமை யாளர்கள் முடிவு செய்து உள்ள னர். இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம் மேளன தலைவர் தன்ராஜ், செய லாளர் ராமசாமி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, சுங்க கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்தி வரும், ஒன்றிய அரசை கண்டித்து வரு கிற ஏப்.1 ஆம் தேதியன்று, தமிழ் நாட்டிலுள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கண்டன ஆர்ப்பாட் டம் நடத்த சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து உறுப்பு சங்க நிர்வா கிகளும், தங்களுடைய கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தங்கள் பகு தியில் உள்ள லாரி உரிமையாளர் களுடன் அருகில் உள்ள சுங்கச் சாவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, வெற்றி பெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பதாகை தயார் செய்து கொள்வ துடன், சுங்கச்சாவடிகளுக்கு அரு கில் உள்ள காவல் நிலையம் அல்லது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முறையான அனுமதி பெற்று கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.