திருப்பூர், மே 3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் மறைவுக்கு கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு அலுவலகம் முன் பாக அஞ்சலி செலுத்தி இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. திருப்பூரில் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் முன்பு தெற்கு மாநகரச் செய லாளர் டி.ஜெயபால் தலைமையில் திங்க ளன்று மாலை செவ்வஞ்சலி செலுத்தப் பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். ராஜகோபால் இரங்கல் உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.நந்த கோபால், வடக்கு மாநகரச் செயலாளர் பி. ஆர்.கணேசன், வடக்கு ஒன்றியச் செயலா ளர் ஆர்.காளியப்பன் உள்ளிட்ட மாவட்டக் குழு, இடைக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டு எம்.என்.எஸ்.வெங்கட்ட ராமன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.