கேரளம் மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் வெள்ளியன்று அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் என்.கே.பகவதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.