districts

img

அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடியின மக்கள் மறியல்

பென்னாகரம், ஜுன் 3-  ஏரியூர் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடி மக்கள்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.  தருமபுரி மாவட்டம், பென்னா கரத்தை அடுத்த  ஏரியூர் அருகே சிகரலஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாதுகொட்டாய் என்ற  மலைக் கிராமம் உள்ளது. இந்த மலைக் கிராமத்தில் 40க்கும் மேற் பட்ட பழங்குடி மக்கள் நான்கு தலை முறையாக  குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இதனால் இங் குள்ள பழங்குடியின மக்கள் பெரி தும் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்து வருகின்றனர். குறிப் பாக, யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் அரசு மருத் துவமனைக்கு செல்ல   சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதே போல் கர்ப்பிணி பெண்கள் மற்றும்  நோயி னால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் பாம்பு, தேள், போன்ற விஷ சந்துக்கள் கடித்தால் சாலை வசதி  இல்லாததால் உரிய நேரத்தில்  செல்ல முடியாமல் சிலபேர் வழி  தடத்திலேயே இறந்துள்ளனர். எத்தனை முறை மனு கொடுத் தாலும் இதனை பெற்றுக்கொண்டு அதிகாரிகள் கண்டும், காணமாலும் இருக்கின்றனர் என குற்றம்சாட்டி இந்த மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். மாதுகொட்டாயில் இருந்து ஏரியூர் செல்லும் சாலை யில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.  இதனையடுத்து சம்பவ இடத் திற்கு வந்த அதிகாரிகள் போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமா தான பேச்சுவார்த்தை நடத்தி  கோரிக்கைகளை நிறைவேற் றுவதாக உறுதியளித்தனர். இத னையடுத்து அனைவரும் கலைந்து  சென்றனர்.