districts

img

பேரூர் தமிழ் கல்லூரியில் முப்பெரும் விழா தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு

கோவை, ஆக.30- பேரூர் தமிழ் கல்லூரி முப்பெரும் விழாவில். தமிழ் வளர்ச்சி மற்றும் செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல  வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியம் ஆகியோர் கலந்து கொண்ட னர்.  பேரூர் தமிழ் கல்லூரியில் குமார தேவர் மாணாக்கர் அருள்நெறி மன்ற 36  ஆம் ஆண்டு தொடக்க விழா, அணி காஞ்சி தமிழ் மன்றத் தொடக்க விழா,  நொய்யல் தமிழ் மன்றத் தொடக்க விழா  என முப்பெரும் நிகழ்வின் தொடக்க  விழா வெள்ளியன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு, கல்லூரியின் தலைவர் சாந்தலிங்க மருதாசல அடி களார் தலைமை வகித்தார். இதில்,  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மன்றங் களைத் தொடங்கி வைத்துச் பேசுகை யில், இத்திருமடமும் கல்லூரியும் எமது  பாட்டனார் காலத்தில் இருந்து தொடர்பு டையது. இருபத்து நான்காம் குருமகா  சந்நிதானங்கள் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் எப்போதும் என்னை வாழ்த்தி  ஆலோசனைகளை வழங்குவார். தமிழ்  வளர்ச்சிக்குக் கல்லூரி செய்யும் பணிக ளுக்கும் தமிழ் வளர்ச்சித் துறை துணை  நிற்கும் என்றார். முன்னதாக, தமிழ் வளர்ச்சித் துறை சாதனைகள் குறிப்புக்  கையேட்டை குரு மகா சந்நிதானங்களி டம் கொடுத்து வெளியிட்டார்.  இதனைத்தொடர்ந்து, மருத்துவம்  மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசுகை யில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் அரசு இளை யோர்களுக்குக் குறிப்பாக மாணவர் களுக்கான அரசாகச் செயல்படுகிறது. மேலும் இதுபோன்று நீண்ட கால மாகச் செயல்படும் மன்றங்களையும் தமிழுக்காக மூன்று மன்றங்கள் செயல் படுவதையும் இங்கு தான் பார்க்கி றேன். இதை நோக்குகையில் கொங்கு நாட்டில் தமிழ் வளர்க்கும் அரும்பணி யைச் சாந்தலிங்க அடிகளார் கல்லூரி செய்து வருவதை அறிய முடிகிறது என் றார்.  இதைதொடர்ந்து மன்றச் செயலர் கள், இணைச் செயலர்கள், உறுப்பி னர்களின் பதவியேற்பும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வும் நடைபெற்றன. அமைச்சர்கள் மாணவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார் கள். இந்த விழாவில் 350 க்கும் மேற்பட்ட  மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.