திருப்பூர், ஜன. 6 - திருப்பூர் பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ் பள்ளியில் சாரண சாரணியார், கப் மற்றும் புல் புல் மாணவர்களுக்காக இரண்டு நாள் உறைவிட பயிற்சி ஜனவரி 5, 6 தேதிகளில் நடை பெற்றது. இந்த முகாமினை பெம் பள்ளியின் சீனியர் பிரின்சிபால் கெளசல்யா ராஜன் துவக்கி வைத்தார். பெம் ஸ்கூலில் இருந்து 66 மாணவ, மாணவிகளும், பி.வி.பி. பள்ளியில் இருந்து 38 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். இவர்களுக் கான பயிற்சிகளை ராஜாராம் மற்றும் ஆசீர்வாதம் வழங்கினர். வெள்ளியன்று அலகு மலையில் இம்மாணவர்களுக்காக மலையேற்றப் பயிற்சியும், நினைவுப் பயிற்சி விளையாட் டுகள் மற்றும் கயிற்றில் அடிப்படை முடிச்சுகள் போடும் பயிற் சியும் தரப்பட்டன. பெம் ஸ்கூல் பள்ளியில் இருந்து லதா, ரேவதி, ஜெயஸ்ரீ, ஹேமா, சிவசங்கரி, பிவிபி பள்ளியில் இருந்து அலெக்ஸ், ராமராஜ், ஆதிலட்சுமி ஆகிய ஆசிரியர்கள் தலைமையில் இப் பயிற்சிகள் நடைபெற்றது. நிறைவு விழாவில் திருப்பூர் மாவட்ட தலைமையிடத்து சாரணர் இயக்கத்தின் கமிசனர் ஆ.ஈசுவரன், முனைவர் ஹரி ஹரசுதன் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவ மாணவிக ளையும் வாழ்த்திப் பேசினர்.