districts

ததீஒமு சார்பில் நடைபயணம்

ஈரோடு, பிப்.1- தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், ஈரோடு மாவட் டத்தில் நடைபயணம் நடைபெற்றது. சாதியம் தகர்ப்போம், மனிதம் வளர்ப்போம், சமத்துவ சமுதாயம் படைப்போம் என்கிற முழக்கத்தை முன்வைத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஈரோடு மாவட் டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தவுட்டுப்பாளையத்தில் அந்தியூர் தாலுகா தலைவர் ஏ.முருகன் தலைமையில் தொடங்கிய இப்பய ணத்தை, விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செய லாளர் ஆர்.குமார் தொடங்கி வைத்தார். அந்தியூர் நகரம் முழு வதும் சென்ற நடைபயணத்தில், மாவட்ட தலைவர் பி.பி.பழனிசாமி, துணைத்தலைவர் எஸ்.மாணிக்கம், அந்தியூர் தாலுகா செயலாளர் ஏ.கே.பழனிசாமி, சிபிஎம் மாவட்ட செயற் குழு எஸ்.வி.மாரிமுத்து, அந்தியூர் பேரூராட்சி கவுன்சிலர் எஸ்.கீதா உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.