உடுமலை, ஆக.10 - உடுமலை சைனிக் பள்ளியில் இயற்கையைப் பாதுகாக் கும் வகையில் சனியன்று தாய்க்கு செடி நிகழ்ச்சி நடைபெற் றது. இதில், மரகன்றுகளுக்கு தாயின் பெயரை வைத்து, அதை பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்து கொண்டனர். அமராவதிநகர் சைனிக் பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூ ழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வை வலியுறுத்தும் தாய்க்கு செடி நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது. இதில் மாண வர்கள், ஆசிரியர்கள் மற்றும் அமராவதி கிராம மக்கள் ஆர்வத் துடன் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் கேப்டன் கே.மணி கண்டன் மற்றும் பள்ளி வளாகத்தின் முதல் பெண்மணி லட்சுமி மணிகண்டன் ஆகியோர் மரம்நடும் நிகழ்வை தொடங்கி வைத்தனர். இதில் கேப்டன் கே.மணிகண்டன் பேசுகையில், மரங்கள் நமது பூமியின் உயிர்நாடி. மரங்களை நடுவதன் மூலம், நமது சுற்றுச்சூழலுக்கு பங்களிப்பதோடு மட்டுமல்லா மல், நமது பூமியையும் பாதுகாக்கின்றோம். நிலையான எதிர் காலத்தை உறுதி செய்வது நமது கடமையாகும் என்றார். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மரம் நடும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சைனிக் பள்ளி வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட நாட்டு மரக்கன்று கள் நடப்பட்டன. மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளூர் மக்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மரக்கன்றுகளை நட்டு, தாயின் பெயர் வைத்து அதைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத் துக்கொண்டனர்.