districts

img

மருத்துவமனையில் ஏற்பட்ட மின்சாரத் தடையால் டார்ச் லைட் வெளிச்சத்தில் குழந்தைக்கு சிகிச்சை

உதகை, நவ.13- கோத்தகிரி அரசு மருத்துவம னையில் மின்சாரம் இல்லாமல் செல்போன் டார்ச் லைட் வெளிச் சத்தில் ஒன்றரை வயது குழந் தைக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி யில் உள்ள அரசு மருத்துவம னைக்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேம்படுத்தப்பட்ட கோத்தகிரி அரசு மருத்துவமனை யில் சமீப நாட்களாக அதிர்ச்சி  தரும் சம்பவங்கள் நடந்து வருகி றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கட்டிலில் நாய் படுத்திருந்த சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. இந்நிலையில், புத னன்று  கோத்தகிரி இடுகரை பகுதி யிலுள்ள தம்பதியினரின் ஒன்றரை வயது மகளுக்கு திடீரென உடல்  நலக்குறைவு ஏற்பட்டது. உடனடி யாக குழந்தையை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அப்போது, அரசு மருத்துவமனையில் மின்சா ரம் இல்லாமல் இருட்டில் டார்ச் லைட் மற்றும் செல்போன் டார்ச்  வெளிச்ச உதவியுடன் செவிலியர் முதலுதவி சிகிச்சை அளித்தார்.  அரை மணி நேரமாக சிகிச்சை அளிக் கப்பட்ட பின்பு, மேல் சிகிச்சைக்காக குழந்தையை உதகை அரசு மருத் துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கோத்தகிரி அரசு மருத்துவம னையில் மின்சாரம் இல்லாமல் டார்ச் லைட் வெளிச்ச உதவியுடன் குழந்தைக்கு சிகிச்சை அளித்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோத் தகிரி மருத்துவமனையில் அடிக் கடி சர்ச்சைக்குள்ளான சம்பவங் கள் நடந்து வருவது பொதுமக் களிடையே பெரும் அச்சத்தை ஏற் படுத்தி உள்ளது. எனவே உடனடி யாக மாவட்ட நிர்வாகம் கோத்த கிரி அரசு மருத்துவமனையில் அடிப் படை வசதிகளை செய்துதர வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது.