districts

img

சாதி அடிப்படையில் பணிகளை ஒதுக்குவதா?

பொள்ளாச்சி, ஜன.5- பொள்ளாச்சி அரசு பேருந்து  பணிமனை மேலாளர்கள் சாதி அடிப் படையில் ஓட்டுநர்களுக்கு பணி களை ஒதுக்கீடு செய்வதற்கு கண்ட னம் தெரிவித்து சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தி னர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஓட்டுநர்களின் போஸ்டிங் எனப்படும் பணிகளை ஒதுக்கீடு செய்வதில் சாதிரீதியான பாரபட்சம் காட்டப்படுவதை கண்டித்து அரசு போக்குவரத்து  ஊழியர் சங்கத்தி னர் (சிஐடியு) பொள்ளாச்சி பேருந்து பணிமனை முன்பு புதனன்று காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் கோவை மண்டல தலைவர் பரம சிவம் தலைமை வகித்தார். கோவை  மாவட்ட பொதுச்செயலாளர் வேளாங் கண்ணிராஜ் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்.  அப்போது அவர்   பேசுகையில், பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகத்தின் பணிமனையின் துணை மேலாளர் ராதாகிருஷ்ணன் மற் றும் பணிமனை 3-ன் கிளை மேலா ளர் ராமசந்திரன் ஆகியோர் பேருந்து ஓட்டுனர்களுக்கான பணியை சாதி அடிப்படையில் தினமும் ஒதுக்கு வதும், இதற்கு லஞ்சமாக பணம் பெறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்தகைய போக்கினை  நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். மேலும், இத்தகைய அநாகரிகமான செயலில் ஈடுபட்ட  துணை மேலாளர் மற்றும் கிளை மேலாளர் ஆகியோர் மீது போக்கு வரத்து கழக நிர்வாகம் துறைரீதியி லான நடவடிக்கை எடுக்க வேண் டும். இப்பிரச்சினை குறித்து தமிழக அரசு கவனம் செலுத்தி உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி னார். முன்னதாக, இப்போராட்டத்தை விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ஏ, துரைசாமி, பொருளாளர் கே.மகா லிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். முடிவில், சிஐடியு பொள்ளாச்சி ஒருங்கிணைப்பாளர் ஆர்.சேதுரா மன் நன்றி கூறினார். இந்த போராட் டத்தில் போக்குவரத்து தொழிலா ளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்துக் கொண்டனர்.