திருப்பூர், ஜன.4- மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு, வீட்டு வசதி உள் ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற அரசு உத்தரவுப்படி சிறப்பு குறை தீர்க் கூட்டங்களை நடத்த வலியுறுத்தி திருப்பூரில் மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்துவகை மாற் றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத் தின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட் சியர் அலுவலகம் முன்பாக செவ்வா யன்று இந்த போராட்டம் நடைபெற் றது. இதில், திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மாற்றுத் திற னாளிகள் அடையாள அட்டை பெற வருபவர்களை மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் அலைக்கழிப்பு, அவமரியாதை செய்யாமல் உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும். மருத்துவச் சான்று வழங்க நரம்பி யல் மருத்துவர் அடாவடி போக்கு டன் நடந்து கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும். திருப்பூர், உடு மலை, தாராபுரம் கோட்டங்களில் அந்த வருவாய் கோட்டாட்சியர், சார் ஆட்சியர் தலைமையில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாற்றுத் திறனாளிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட் டது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல முயன்ற மாற்றுத்திறனாளிகளை, காவல் துறையினர் தடுக்க முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை யடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.நம்புரா ஜன், மாவட்டத் தலைவர் டி.ஜெய பால், மாவட்டச் செயலாளர் பா. ராஜேஷ் உட்பட சங்கத்தின் நிர்வா கிகள், மாற்றுத் திறனாளிகள் பெருந்திரளானோர் கலந்து கொண் டனர். பிற்பகல் 1 மணி வரை காத்திருப் புப் போராட்டம் நடைபெற்ற நிலை யில் வருவாய் கோட்டாட்சியர் ஜெக நாதன் இவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையில் கோட்ட அளவில் சிறப்பு குறை தீர்க் கூட்டம் நடத்துவ தற்கு ஒப்புக் கொண்டதுடன், அடா வடியாக நடந்து கொள்ளும் நரம் பியல் மருத்துவர் மீது உரிய நடவ டிக்கை எடுக்கவும் உறுதியளிக்கப் பட்டது. இதையடுத்து காத்திருப்புப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட் டது.