கோவை, ஜூன் 6- பொது இடத்தில் ஆடு வளர்க்க பஞ்சாயத்து நிர்வா கத்தால் அனுமதி மறுக்கப் படுவதாக கூறி சூலூரைச் சேர்ந்த ஏஞ்சல் என்ற திரு நங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித் தார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் மயிலம்பட்டியில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். ஒரு பொது இடத்தில் கொட்டகை அமைத்து 15 ஆடுகளை வளர்த்து வந்தேன். ஆனால், பஞ்சாயத்தில் கேட்டுவிட்டுதான் ஆடு வளர்க்க வேண்டும் என்று கூறி எனது கொட்டகையை அப் புறப்படுத்தி விட்டனர். நான் யாரிடமும் கடன் கேட்டு நிற்க வில்லை. சொந்தத் தொழில் செய்கிறேன். அதற்கும் அனுமதி கொடுக்காமல் என்னை அழைக்கழிக்கிறார்கள். எனக்கு சொந்த தொழில் செய்ய உதவாவிட்டாலும், தொந்தரவு செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஞ்சல் கூறினார்.