districts

img

வீட்டுமனை கேட்டு திருநங்கைகள் மனு

தருமபுரி,ஜன.29- அரூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு அரூர் வட்டாட்சியர் கனிமொழியிடம் மனுகொடுத்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது, அரூர் பகுதியில் 25 திருநங்கைகள் உள்ளோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டுமென வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத் துள்ளோம். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில் இருந்து வருகிறோம். மூன்று மாதத்தில் வீட்டை காலி செய்யச் சொல்லி வீட்டின் உரிமையாளர்கள் விரட்டுகின் றனர். தமிழக அரசு எங்களுக்கு தனி நல வாரியம்,  ரேசன் கார்டு, ஆதார் அட்டையில் திருநங்கைகள் என திருத்தம் செய்து வழங்கி வழங்கியுள்ளது. நாங்கள் சொந்த வீட்டில் குடியேற ஒரே இடத்தில் தொகுப்பாக வீட்டு மனை பட்டா வழங்கி அரசு உதவ வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து அரூர் வட்டாட்சியரிடம் கேட்டபோது விரை வில் திருநங்கைகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.