districts

img

திருமூர்த்தி அணைக்கு தானம் வழங்கிய நிலத்தை வேறு துறைக்கு மாற்றுவதா? விவசாயிகள் கடும் எதிர்ப்பு

உடுமலை, ஏப். 21- உடுமலையில், விவசாயிகள் திரு மூர்த்தி அணைக்காக பல ஏக்கர் நிலங் களை தானமாக  வழங்கினர். அந்த நிலங் களை எந்த முன் அறிவிப்பும் இல்லாமல்  வேறு துறைக்கு மாற்றியதற்கு விவசா யிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடுமலை கோட்டாட்சியர் ஜஸ் வந்த் கண்ணன் தலைமையில் விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டம் உடுமலை  வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத் தில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் உடுமலை வட்டாட்சியர் கண்ணா மணி உள்ளிட்ட அதிகாரிகள், அலுவ லர்கள் மற்றும் உடுமலை, மடத்துக்கு ளம், குடிமங்கலம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது: உடுக்கம்பாளையம் பரமசிவம்: ஒற் றைச்சாளர கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற் காக விவசாயிகளிடமிருந்து சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப் பட்டு வருகிறது. அந்த  மனுக்களை விரைவில் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமராவதி கூட்டு றவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு  கரும்பு அரவைப்பணி இன்னும் துவங்க வில்லை.

முதற்கட்டமாக இளஞ்சூடு ஏற்றும் பணி துவங்கியுள்ள நிலையில், இன்னும் ஆலைப்பராமரிப்பு பணிகள்  நிறைவு பெறவில்லை. எப்போது அர வைப்பணி துவங்கும். அரவைப்பணி துவங்க தாமதமானால் கரும்பு விவசா யிகள் கடும் பாதிக்கப்படுவார்கள். எனவே விரைவில் கரும்பு அரவைப் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமூர்த்தி அணையில் போதுமான அளவு தண்ணீர் இருந்தும்,  பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப் பாடு நிலவி வருகிறது. குடிநீர் திட்டங்க ளுக்கு தடையில்லா மும்முனை மின்சா ரம் வழங்கப்பட்டு வரும் நிலையிலும், ஏன் தட்டுப்பாடு நிலவுகிறது. பிஏபி  பாசன நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பு களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். எஸ்.ஆர்.மதுசூதனன்: வேளாண் பொறியியல் துறை அலுவலகம் சங்கர் நகர் பகுதிக்கு மாற்றப்பட்டால் விவசாயி களுக்கு பயன் அளிக்காது. எனவே  வேளாண் ஒழுங்குமுறை விற்பனைகூட  வளாகத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பட்டு வளர்ச் சித்துறை அலுவலகத்தையும் அந்த வளாகத்திற்குள் மாற்ற வேண்டும். நில  அளவைத் துறையினருக்கு மனு அளித் தால் உரிய முறையில் பணிகள் நடை பெறுவதில்லை. செயல்படாத துறையா கத்தான் உள்ளது. பல ஆண்டுகளாக அளித்த மனுக்கள் இன்றளவும் நிலு வையில் தான் உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும்.

கோவை மாவட்டத்தில் விவசா யிகள் பயன்பாட்டிற்காக குளம், குட்டை களில் வண்டல் மண் எடுக்க அனுமதி  வழங்கப்பட்டுள்ளது. நமது பகுதியில்  இதுவரை அனுமதி வழங்கபடவில்லை. ஆனால், வணிக பயன்பாட்டிற்காக நாள்தோறும் பல லோடு கிராவல் மண் எடுக்கப்படுகிறது. எனவே விவ சாயிகள் மண் எடுக்க உடனடியாக அனு மதி அளிக்க வேண்டும். மேலும், கொழு மம், கோதையாற்றில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும். இக்கூட் டத்தில் வழங்கப்பட்ட மனுக்களின் நிலை குறித்து அடுத்த கூட்டத்தில் சம்பந் தப்பட்ட மனுதாரர்களுக்கு அறிவிக்க வேண்டும், என்றார். கோபால்: விவசாயிகள் குறைதீர்க் கும் கூட்டத்தில் பெறப்படும் மனுக்க ளுக்கு, அதிகாரிகள் முறையாக பதில்  அளிப்பதில்லை. கடந்த மாதம் ஈசல் திட்டு மலைவாழ் மக்கள் தங்கள் கோரிக் கைகள் குறித்து கூட்டத்தில் மனு அளித் தனர். இதுவரை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை. இக்கூட்டம் வெறும் சம்பிரதாய கூட் டமா? என கேள்வி எழுப்பினார். மேலும்  அவர் பேசுகையில், தளி, ஜல்லிபட்டி விவசாயிகள் திருமூர்த்தி அணைக்கு பல ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கி உள்ளனர். அணையை ஒட்டி சர்வே எண் 201 முதல் 206 வரை உள்ள நிலங்களை வேறு துறைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அணைக்கு தானம் வழங்கிய நிலம்  எப்படி வேறு துறைக்கு மாற்றப்பட் டது? அப்பகுதியில் மண் அரிப்பை தடுக்க, வனத்துறை சார்பில் ஆயிரக்க ணக்கான மரங்கள் நடப்பட்டு வளர்ந்து வருகிறது. அதனை அழிப்பது ஏன்?  இதனால் விவசாயிகளுக்கும், வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும். இது குறித்து அரசுக்கு தெரிவித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

சுரேஷ்குமார்: தனியார் இடத்தில்  மண் எடுப்பதற்கு கனிம வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட் டாலும், அந்த பகுதிகளை சார்ந்த வரு வாய்த்துறை அலுவலர்கள் அது குறித்து கண்காணிக்க வேண்டும். ஆனால், கண்காணிப்பதில்லை. குறிப் பாக தளி பேரூராட்சிக்குட்பட்ட சர்வே  எண் 192 நிலத்தில் கடந்த இரண்டு மாதங் களாக கிராவல் மண் எடுக்கப்பட்டு வரு கிறது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே இதுகுறித்து ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசா யிக்கு உரிய தீர்வு காண வேண்டும். செளந்தர்ராஜ்: உடுமலை பொதுப் பணித்துறை அலுவலர் பிஏபி வாய்க் கால் நிர்வாக தலைவர் விவசாயிகளை மிரட்டி பணம் வாங்கும் வீடியோ சமுக வலைத்தளங்களில் வந்த நிலையில், தற்பொழுது வரை அந்த அதிகாரி மீது  நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும்,  பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்திருப்பது கண் டிக்கத்தக்கது. தவறு செய்த அதிகா ரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை  எடுக்க வேண்டும். பல வருடங்களாக தனி நபர் ஆக்கிரமிப்பில் இருக்கும்  ஜம்புக்கல் மலை குறித்த வருவாய்த் துறை எடுத்த நடவடிக்கை என்ன என்று  இதுவரை தெரியவில்லை. இது குறித்து  கோட்டாட்சியர் விளக்கம் தர வேண் டும். எலையமுத்தூர் எவியாஜென் என்ற தனியார் நிறுவனத்தால் ஆக்கிர மிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் சுமார் 27  ஏக்கர் நிலத்தை எடுத்து ஏழை விவசாயத்  தொழிலாளர்களுக்குத் தர வேண்டும், என்றார்.