மேட்டுப்பாளையம், பிப்.9- காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் புதிதாக இணைக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு, மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் களப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகி றது. சுனாமி, பூகம்பம், நிலச்சரிவு, புயல் மற்றும் பெருமழை என பேரிடர் காலங்களில் களம் இறங்கி மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் தேசிய பேரிடர் மீட்பு படையினரை, இனி வரும் காலங்களில் காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்தும் பணியி லும் இணைக்க ஒன்றிய அரசு உத்தர விட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரே லியா, சிலி, ஸ்பெயின், பிரேசில் உள் ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் காட்டுத்தீ பரவலால் பெரும் பாதிப் பிற்குள்ளாகி வரும் நிலையில் இதன் தீவிர தன்மையினை உணர்ந்து இது வரை வனத்துறை மற்றும் தீய ணைப்புதுறையினர் மட்டுமே பயன் படுத்தப்பட்டு வந்த நிலையில், காட் டுத்தீ பரவலை கட்டுக்குள் கொண்டு வர முதல்முறையாக நவீன கருவி களுடன் தேசிய பேரிடர் மீட்பு படையி னர் களம் இறக்கபடவுள்ளனர்.
இதுவரை ஈடுபட்ட மீட்பு பணிகளி லிருந்து முற்றிலும் மாறுபட்ட கள மாக உள்ள அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் அதில் வாழும் காட்டுயிர்க ளின் இயல்பு, காட்டுத்தீ பரவும் கார ணங்கள் அதனை கட்டுப்படுத்தும் முறை என தேசிய பேரிடர் மீட்பு படை யினருக்கு அந்தந்த மாநில அரசுக ளின் உதவியுடன் பயிற்சியளிக்கவும், இவ்வுத்தரவின்படி திட்டமிடப்பட் டுள்ளது. இதன்படி கோவை மாவட் டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனப்பகுதியில் 50 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுக்கு மாவட்ட வனத்துறை அதிகாரிகளின் மேற்பார் வையில் களப்பயிற்சியளிக்கப்பட் டது. இதில், காட்டுத்தீயை கட்டுப்ப டுத்த வனத்திற்குள் செல்லும் போது எதிர்படும் வனவிலங்குகளின் இயல்பு, அவற்றிடமிருந்து ஆபத் தின்றி விலகுவது, காட்டுத்தீ உரு வாகியுள்ள பகுதியை செயற்கை கோள் உதவியுடன் இயங்கும் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்டறியும் முறை, புதர்காடு, புல்வெளி காடு, அடர்ந்த காடு, பள்ளத்தாக்கு மற்றும் மலை சார்ந்த காடுகள் என பகுதிகேற்ற வாறு மாறுபடும் காடுகளின் தன்மை, வனத்தீ பரவலை கட்டுப்படுத்தும் முறை என வீரர்களுக்கு கற்று தரப் பட்டது. தமிழக வனத்துறை அதிகாரி வித் யாசாகர் தலைமையிலான வனத் துறையினர் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு இந்த பயிற்சியினை அளித்தனர்.