சேலம், பிப்.3- சேலம் அரசு மருத்துவமனையில், 3 மாதமாக ஊதியம் வழங்காததைக் கண் டித்து பயிற்சி மருத்துவர்கள் புதனன்று பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறுதியாண்டு படித்து முடித்த 100 மருத்து வர்கள், பயிற்சி மருத்துவர்களாக பணி யாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்பட வில்லை. இதனால் கல்லூரி முதல்வரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், ஊதியம் கிடைக்காததால் பயிற்சி மருத்துவர்கள் புத னன்று பணியை புறக்கணித்து போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டக் காரர்களிடம், கல்லூரி துணை முதல்வர் தேன்மொழி, மருத்துவமனை கண்காணிப் பாளர் தனபால், பொது மருத்துவ சிகிச்சை பிரிவு துறை தலைவர் சுரேஷ் கண்ணா ஆகி யோர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதுகுறித்து பயிற்சி மருத்துவர்கள் கூறுகையில், சேலம் அரசு மருத்துவமனை யில் பயிற்சி மருத்துவர்களாக 100 பேர் பணி யாற்றி வருகிறோம். எங்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்பட வில்லை. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. எனவே, எங்களுக்கு ஊதியம் கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம், என்றனர்.