districts

ரயில் மோதி 3 பேர் பலி

ஆம்பூர், மே 5-வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கரும்பூர் கிராமத்தை ச்சேர்ந்த சங்கர் (45) ஷூ கம்பெனி தொழிலாளி. இவருடன் பானுமதி (50) இவருடைய பேரன் தமிழரசன் மகன் நித்தீஷ்(11) ஆகிய மூவரும் சென்னைக்கு செல்ல ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர். தண்டவாளத்தை கடக்கும் போது, மங்களூர் விரைவு ரயில் அதி வேகமாக வந்தது. இதனால் மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்துக்குவந்து மூன்று பேரின் உடலையும் கைப்பற்றிபிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

;