ஓய்வுபெற்ற அதிகாரியிடம் பணமோசடி
ஓய்வுபெற்ற அதிகாரியிடம் பணமோசடி நாமக்கல், ஆக.1- ஓய்வுபெற்ற அதிகாரியிடம் நூதன முறையில் ரூ.17 லட்சம் மோசடி செய்தவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் லோகநாதன் (74). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணி யாற்றி ஓய்வுபெற்றார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இவரை கைப்பேசியில் தொடர்பு கொண்ட நபர், தான் சிபிஐ அதிகாரி எனவும், தங்களது வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து முறைகேடாக ரூ.17 லட்சம் பணப்பரி மாற்றம் நடைபெற்றுள்ளதாகவும், அதை உடனடியாகத் திரும்பச் செலுத்த வேண்டும். இல்லையெனில் கைது நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என லோகநாதனிடம் தெரி வித்துள்ளார். அவரும் குழப்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ரூ.17 லட்சத்தை, அவர்கள் அனுப்பிய எண்ணிற்கு இணைய வழியாக அனுப்பியுள்ளார். அதன்பிறகு, தான் ஏமாற் றப்பட்டதை உணர்ந்த அவர், மாவட்ட கணினி வழி குற்றத் தடுப்பு (சைபா் கிரைம்) காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை விபத்தில் கணவன், மனைவி பலி
சாலை விபத்தில் கணவன், மனைவி பலி சேலம், ஆக.1- வாழப்பாடி அருகே புதனன்று மாலை துக்கம் விசா ரித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய கணவன், மனைவி மீது ரெக்கவரி வாகனம் மோதி உயிரிழந்த சம்ப வம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள படை யாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகன் (58). இவரது மனைவி பொன்னம்மாள் (54). இருவரும் புதனன்று மாலை காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி, சேசன்சாவடியில் உறவினர் ஒருவர் இறந்ததற்கு துக்கம் விசாரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். துக்கம் விசாரித்து விட்டு சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். சேசன்சாவடி அருகே சென்று கொண்டி ருந்த போது, கோவையிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரெக்கவரி வாகனம், எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த பொன்னம்மாள் சம்பவ இடத்திலேயே பலியா னார். படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் நிலையில், வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்கு கொண்டு செல்லப்பட்ட விவசாயி முருகனும் உயிரி ழந்தார். உறவினரின் வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய கணவன் - மனைவி, சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களி டையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்து குறித்து வாழப்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறந்த காவல் நிலையத்திற்கான விருது
சிறந்த காவல் நிலையத்திற்கான விருது சேலம், ஆக.1- அன்னதானப்பட்டி காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாகத் தேர்வு செய்யப்பட்டு, காவல் ஆய்வாளர் சின்னதங்கம் அதற்கான விருதைப் பெற்றார். காவல் நிலையங்களை தூய்மையாக வைத்திருப்பது டன், வழக்குகளை விரைந்து முடிப்பது, காவல் நிலையங்க ளைத் தேடி வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசுவது உள்ளிட்ட அம்சங்கள், சிறந்த காவல் நிலையங்களுக்கான தேர்வின்போது ஆய்வு செய்யப்பட்டன. அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் 49 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், சேலம் மாநக ரில் உள்ள அன்னதானப்பட்டி காவல் நிலையமும் இடம் பெற் றது. இதற்கான விருது வழங்கும் விழா சென்னையில் திங்க ளன்று நடைபெற்றது. தமிழக காவல் துறை இயக்குநர் சங்கர் ஜிவால், தேர்ந்தெடுக்கப்பட்ட காவல் நிலைய ஆய்வா ளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்படி, 2022 ஆம் ஆண்டில் சேலம், அன்னதானப்பட்டி காவல் நிலைய ஆய்வா ளராக இருந்த சின்னதங்கம் இந்த விருதைப் பெற்றார். இவர் தற்போது இரும்பாலை காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபுவை நேரில் சந்தித்த காவல் ஆய்வாளர் சின்னதங்கம், விருதைக் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
மேட்டூர் - எடப்பாடி இடையே போக்குவரத்து நிறுத்தம்
சேலம், ஆக.1- காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக,மேட்டூரில் இருந்து எடப்பாடி செல்லும் சாலையில் வியாழனன்று காலை முதல் போக்குவரத்து நிறுத்தபட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவ தால், வியாழனன்று காலை அணைக்கு வரும் 1.70 லட்சம் கனஅடி நீரும், அணையின் பாது காப்புக்கருதி 16 கண் பாலம் வழியாக வெளி யேற்றப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் கூடு தல் நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அணை யில் இருந்து நீர் சீறிப்பாய்ந்து, மேட்டூர் அனல் மின் நிலையம் சங்கிலி முனியப்பன் கோவில் வழியாக எடப்பாடி செல்லும் சாலையை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக வியாழனன்று காலை முதல் அந்த பகுதி யில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூரில் இருந்து எடப்பாடி செல்லும் சாலை யின் முன்பாக காவல் துறையினர் கான்கிரீட் தடுப்புகளை வைத்து போக்குவரத்தை நிறுத் தியுள்ளனர். இப்பாதை அடைக்கப்பட்டதால் சங்கிலி முனியப்பன் கோவில், நாயக்கன் பட்டி, பொறையூர், செக்கானூர் ஆகிய கிரா மங்களுக்கு போக்குவரத்து தடைபட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். பள்ளி வாகனங்கள் இயக்க முடியாததால் பெற் றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு காவிரி கிராஸ் பாலம் வழியாக இரு சக்கர வாகனங்களில் அழைத்துச் செல்கின்றனர். மேட்டூர் - எடப்பாடி செல்லும் அரசு பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. அனல் மின் நிலைய அதிகாரிகள் அனுமதித்தால், மேட் டூர் அனல் மின் நிலைய வளாகம் வழி யாக பேருந்து இயக்கப்படும் என போக்கு வரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆக.7இல் சிறப்பு கைத்தறி ரகங்கள் கண்காட்சி
நாமக்கல், ஆக.1- 10 ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, ஆக.7 ஆம் தேதியன்று சிறப்பு கைத்தறி ரகங்கள் கண்காட்சி நடைபெற உள்ளதென நாமக்கல் ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டம், சூரியம்பாளையத்தில் உள்ள செங்குந்தர் பாவடி திருமண மண்டபத்தில் சிறப்பு கைத்தறிக் கண்காட்சி ஆக.7 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்த கைத்தறி துணி ரகங்களான ராசிபுரம் பட்டுச்சேலைகள், இளம்பிள்ளை மற்றும் ஆர்.புதுப்பாளையம் பருத்தி சேலைகள், காட்டன் கோா்வை சேலைகள், கைத்தறி வேட்டி ரகங்கள், துண்டுகள், பவானி ஜமுக்காளம், படுக்கை விரிப்புகள், கால்மிதி (மேட்) ஆகியவை கண்ணைக் கவரும் வண்ணங்களில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. மேலும், அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை, கண் சிகிச்சை ஆகிய பிரிவு சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு நெசவாளர்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க உள்ளனர். கைத்தறி துறையால் செயல்படுத்தப்படும் கூட்டுறவு அமைப்பு, கூட்டுறவு அமைப்பு சாராத கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் நல்வாழ்வுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாமும் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள், கைத்தறி நெசவாளர்கள் கண்காட்சியில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
மக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடை: வாலிபர் சங்கம் அகற்ற வலியுறுத்தல்
உடுமலை, ஆக.1 - உடுமலை மூணாறு மாநில நெடுஞ் சாலையில், மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற வேண்டும். அதே பகுதியில் புதிய தனியார் மதுபானக்கூடம் கட்டு வதை தடுக்க வேண்டும் என இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் வியாழ னன்று ஜல்லிபட்டியில் நடைபெற்ற மக் களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனு அளித்தனர். உடுமலை ஜல்லிபட்டியில் மக்களு டன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற் றது. இதில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி குமரகுரு அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, உடுமலை ஒன்றியம், குறிச்சிக் கோட்டை ஊராட்சி பகுதி மற்றும் பள் ளபாளையம் ஊராட்சியின் எல்லை யில் போக்குவரத்து நெரிசல் உள்ள மாநில நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை (எண் 2332) அமைந்துள்ளது. இச் சாலையின் வழியாக தான் மூணார், அம ராவதி அணை, திருமூர்த்தி அணை, பழனி மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர முடியும். மேலும், தனியார் மேல்நிலை பள்ளி, பத்துக்கும் மேற் பட்ட தனியார் தொழிற்சாலைகள் உள்ள இப்பகுதியில் அனைவருக்கும் இடை யூறாக இந்த டாஸ்மாக் கடை உள்ளது. தற்போது இதே பகுதியில் தனியார் மது பான கூடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதை அரசு அனுமதிக்க கூடாது. ஏற்கனவே பல சமூகவிரோத சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலை யில், புதிதாக மதுபானக்கூடம் அமை வது பொது மக்களுக்கும் இடையூறு இருக்கும். எனவே இந்த பகுதியில் அமைதியான சூழல் ஏற்படும் வகை யில் மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். தனியார் மதுபான கூடம் கட்டும் பணியை உடனடி யாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூறப் பட்டுள்ளது. இதே போல் கொங்கலக்குறிச்சி பகுதியில் இந்து சமய அறநிலையத்து றைக்கு சொந்தமான பழமையான செல் லாண்டியம்மன் கோவில் பழுதடைந்து காணப்படுகிறது. இதை பராமரிப்பு செய்ய வேண்டும் என மனு அளிக்கப் பட்டுள்ளது. இந்த முகாமில் விடுபட்ட மகளிர் உரிமை தொகை, வீட்டுமனைப் பட்டா மற்றும் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட அனுமதி கேட்டு கூடுத லான விண்ணப்பங்கள் அளிக்கப்பட் டுள்ளது.
வயநாட்டில் பாதிக்கப்பட்டோருக்கு திருப்பூர்வாழ் மக்கள் உதவக் கோரிக்கை
திருப்பூர், ஆக.1 – கேரள மாநிலம் வயநாட்டில் அதிகனமழையில் நிலச்சரிவு ஏற்பட்டு 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இந்த பேரிடருக்கு திருப்பூர் வாழ் மக்கள் நிவாரண உதவி களை வழங்குமாறு திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன், எம்.எல். ஏ.க.செல்வராஜ் ஆகியோர் கூட்டாக கோரியுள்ளனர். மேலும் இந்த உதவிகளைப் பெறுவதற்கு திருப்பூர் தெற்கு பகுதியில் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம், வடக்குப் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அருகே செங்குந்தர் திருமண மண்டபம் ஆகியவற்றில் ஏற்பாடு செய்து தரும்படி ஆட்சியருக்கு எம்.பி., எம்.எல்.ஏ., கோரியுள்ளனர்.
பாலப்பட்டியில் இன்று மின் தடை
உடுமலை,ஆக.1- உடுமலை தாலூகா பாலப்பட்டி துணை மின்நிலை யத்துக்கு உட்பட்ட மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால், வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: உடுமலை காந்தி நகர், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரயில் நிலையம், போலீஸ் குடியி ருப்பு, சந்தை, எஸ்.வி. புரம், பாலப்பம்பட்டி, மைவாடி பிரிவு, கண்ணமநாயக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், மலையாண் டிபட்டிணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி மற்றும் பாப் பான்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்து உள்ளார்.
திருப்பூரை குறிவைக்கும் பிற மாநிலங்கள்: அரசுகள் கூர்ந்து கவனிக்க சைமா கோரிக்கை
திருப்பூர், ஆக. 1 – நூறு ஆண்டு பெருமை மிக்க திருப் பூர் பின்னலாடைத் தொழிலை பிற மாநி லங்கள் குறிவைக்கின்றன. இனியாவது மத்திய, மாநில அரசுகள் இத்தொழில் துறை கோரிக்கைகளைக் கூர்ந்து கவ னித்து உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று தென்னிந்திய பனியன் உற்பத்தி யாளர் சங்கத் தலைவர் வைகிங் ஏ.சி. ஈஸ்வரன் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: எந்த நாட்டில் இருந்தும், என்ன மாதிரியான பின்னலாடை, ஆயத் தஆடைகள் தேவை என வரும்போது ஒரே இடத்தில் சவாலாக ஏற்று நிறை வேற்றி அனுப்பும் ஒரே நகரம் திருப்பூ ரில்தான் சாத்தியம். உள்நாட்டில் ரூ.30 ஆயிரம் கோடி, ஏற்றுமதியில் ரூ.30 ஆயிரம் கோடி என ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் வணிகமா கிறது. இது ஒரு நாளில் ஒருவரால் மட்டும் நிகழ்ந்ததல்ல. கூட்டு முயற்சியால் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர், ஆயி ரக்கணக்கான தொழில் முனைவோரின் கடும் உழைப்பு, முதலீடு, முயற்சி இதன் பின்னால் உள்ளது. இத்தொழிலுக்கு சிர மங்கள் ஏராளம். ஒன்றிய, மாநில அரசு கள் தரும் ஊக்கம் போதுமானதாக இல்லை என்பதே உண்மை.உறுதியான அஸ்திவாரம் இட்ட நம் பகுதியை குறி வைத்து பிற மாநிலங்களில் இருந்து வந்து எண்ணற்ற சலுகைகளை அறி வித்து நம் தொழிலை நகர்த்திப் போக தொடங்கி விட்டனர். எந்த மாநிலத்திற்கு தொழில் சென் றாலும், முழுமையான தயாரிப்புக்கான உப தொழில்களுக்கு இங்குதான் வந் தாக வேண்டும். தொழில் பரவலாக செல் வது வளர்ச்சி மாதிரியான ஒரு பிம்பமே தவிர, மகிழ்ச்சி கொள்ளத்தக்கதல்ல. இனியாவது ஒன்றிய, மாநில அரசுகள் இத்தொழில் கோரிக்கைகளைக் கூர்ந்து கவனித்து உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று வைகிங் ஏ.சி.ஈஸ்வ ரன் கூறியிருக்கிறார்.
தீரன் சின்னமலை நினைவு நாள் உள்ளூர் விடுமுறை
ஈரோடு, ஆக 1- சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு (3.8.2024) சனியன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவ னங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-ன்கீழ் அறி விக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடு முறை பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை முதியவருக்கு 20 ஆண்டு சிறை
கோவை, ஆக 1- மூன்று வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 78 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பெண் வீட்டில் வேலை செய்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி அவர் வேலைக்கு செல்லும் போது தனது மூன்றரை வயது பேத்தியையும் உடன் அழைத்து சென்றார். அப்போது வீட்டு உரிமையாளரான மாக்கினாம்பட்டியை சேர்ந்த முருகன் (78) என்பவர், சிறுமியை அறைக்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது, சிறுமியின் கதறலை கேட்டு, ஓடி வந்த அவ ரது பாட்டி சிறுமியை முதியவரிடம் இருந்து மீட்டார். பின் னர் இந்த சம்பவம் குறித்து அவர் பொள்ளாச்சி அனைத்து மக ளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்த னர். இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வியழனன்று நடந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.
ஈரோட்டில் புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்
ஈரோடு, ஆக.1- தமிழ்நாடு அரசு, மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் ஈரோடு புத்த கத் திருவிழா வெள்ளியன்று தொடங்குகி றது. தமிழ்நாடு அரசு, மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமை ஏற் கிறார். மக்கள் சிந்தனை பேரவை நிறுவனர், தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுக உரையாற்றுகிறார். அமைச்சர் சு.முத்துசாமி புத்தக அரங்கினை திறந்து வைக்கிறார். ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் எம்எல்ஏ உலகத் தமிழ் படைப்பரங்கினைத் திறந்து வைக்கிறார். சனி யன்று நடைபெறும் சிந்தனை அரங்கில் நண் பெனும் நாடாச்சிறப்பு என்ற தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் நாடகமும் தமி ழிசையும் என்ற தலைப்பில் டி.கே.எஸ்.கலை வாணன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்ற னர். தொடர்ந்து 13ஆம் தேதி வரை நடைபெ றும் புத்தகத் திருவிழாவில் மாலை நேர சிந்தனை அமர்வில் பட்டமன்ற பேச்சாளர் கள் கோவை சதாசிவம், பவா.செல்லத்துரை, எழுத்தாளர் தேவி பாரதி, திருச்சி சிவா எம்.பி. உள்ளிட்ட பல ஆளுமைகள் பேசுகின்றனர்.