districts

நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் கூடுதல் போலீசார்

கோவை, அக்.9- மேம்பால பணிக்காக கோவை - அவிநாசி சாலையில் ஞாயிறன்று முதல் போக்கு வரத்து மாற்றம் அமலுக்கு வந்த நிலையில், திங்களன்று போக்குவரத்து நெரிசலை ஒழுங் குபடுத்தும் பணியில் கூடுதல் போலீசார் ஈடு படுத்தப்பட்டனர். கோவை மாநகரில் நாளுக்கு நாள் போக் குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.  இதனை கருத்தில் கொண்டு கோவை - திருச்சி சாலை, அவிநாசி சாலை, குனியமுத்தூர் சாலை உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங் கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதில் கோவை - திருச்சி சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நிறைவடைந்தது. அவிநாசி சாலை மற்றும் உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடை பெற்று வருகிறது. அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.1,650 கோடி செலவில் மேம்பாலங்கள் கட்டப்படு கின்றன. இதற்காக 304 கான்கிரீட் தூண்கள்  கட்டப்பட்டுள்ளன. இதுதவிர அவிநாசி சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகா லும் அமைக்கப்பட்டு வருகிறது. மேம்பால பணியை துரிதமாக மேற்கொள்ளும் வகை யில், அவிநாசி சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என மாநகர போலீசார் அறிவித்திருந்தனர். இந்நிலையில், கோவை - அவிநாசி சாலை யில் போக்குவரத்து மாற்றம் ஞாயிறன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி அவிநாசி சாலை பழைய மேம்பாலத்தில் இருந்து பீள மேடு நோக்கி செல்ல வேண்டிய வாகனங் கள் நஞ்சப்பா சாலை, பார்க் கேட் ரவுண்டானா, சிறைச்சாலை சாலை வழியாக எல்ஐசி சிக் னலை அடைந்து அவிநாசி சாலையில் பய ணிக்கலாம். மேலும், உப்பிலிபாளையம் சிக் னல் அருகே வலதுபுறம் திரும்பி ஹூசூர் சாலை, எல்ஐசி சிக்னல் வழியாக அவிநாசி  சாலையில் பயணிக்கலாம். அண்ணா சிலை சிக்னலில் இருந்து எல்ஐசி சிக்னலுக்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படாது. இதற்கு பதிலாக அண்ணா சிலை சிக்னல் பகுதியில்  இருந்து வாகனங்கள் இடதுபுறம் திரும்பி  ஹூசூர் சாலை, நீதிமன்றம் சாலை வழியாக  உப்பிலிபாளையத்தை அடைந்து அங்கிருந்து பழைய மேம்பாலம் செல்லலாம். மேலும், ஹூசூர் சாலையிலிருந்து வலதுபுறம் திரும்பி எல்ஐசி சிக்னல் வழியாக பார்க்கேட் செல்ல லாம். மேலும், அண்ணா சிலை சிக்னலில் இருந்து வலது புறம் திரும்பி பாலசுந்தரம் சாலை வழியாக வழக்கம்போல் காந்திபுரம் செல்லலாம். இந்த போக்குவரத்து மாற் றத்தை தொடர்ந்து எல்ஐசி சிக்னல், உப்பிலி பாளையம் சிக்னல், அண்ணாசிலை சிக்னல் ஆகிய இடங்களில் இரும்பு தடுப்புகள் வைக் கப்பட்டுள்ளன. இதுதவிர போக்குவரத்து மாற் றம் குறித்து ஆங்காங்கே அறிவிப்பு பேனர்க ளும் வைக்கப்பட்டு உள்ளன. மேலும், போக் குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில்  போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே ஞாயிறன்று விடுமுறை நாள் என்பதால் இந்த  போக்குவரத்து மாற்றம் காரணமாக பெரிய  அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.  ஆனால், திங்களன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும் செயல் பட துவங்கியதால் போக்குவரத்து மாற்றத் தால் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், கூடுதல் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத் தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.