districts

சேலம் மற்றும் ஏற்காட்டில் போக்குவரத்து மாற்றம்

சேலம், மே 17- பாதாள சாக்கடை பணி நடப்பதால் சேலத்திலும், கோடை விழா நடைபெற உள்ளதால் ஏற்காட்டிலும் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி சார்பில் பாதாள  சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக் கும் பணிகள் திருச்சி பிரதான சாலை முதல் மூங்கப்பாடி வரை புதனன்று முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ராசி புரம், மல்லசமுத்திரம், ஆட்டையாம் பட்டி, இளம்பிள்ளை, மகுடஞ்சாவடி, பனமரத்துப்பட்டி மார்க்கமாக செல் லும் அனைத்து பஸ்களும், வள்ளுவர் சிலை சந்திப்பு, கலெக்டர் அலுவலகம், 4 ரோடு, சத்திரம், லீ பஜார், சண்முகா  பாலம், சந்தை பேட்டை வழியாக நெத்தி மேடு சென்று மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டும். புலிகுத்தி சந்திப்பிலிருந்து பிரபாத் செல்ல வேண்டிய இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட 4 சக்கர வாக னங்கள் புலிகுத்தி மெயின் ரோடு, சிவ னார் தெரு, கருங்கல்பட்டி சாலை வழி யாக திருச்சி சாலை வழியாக மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டும்.

இந்த தகவலை சேலம் மாநகர போலீசார் தெரி வித்து உள்ளனர். ஏற்காடு இதேபோல் ஏற்காடு கோடை விழா  மற்றும் மலர் கண்காட்சி மே 21 ஆம் தேதியன்று துவங்கி மே 28 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி ஏற்காடு ஊராட்சி ஒன் றிய அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட் டம் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் பாலசந்தர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கோடை விழாவுக்கு சுற் றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், போக்குவரத்து நெரிசலை தடுப்பது குறித்து விவாதிக் கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களுக்கு எந்த பகுதிகளில் பார்க் கிங் வசதி ஏற்படுத்த வேண்டும், ஏற்கா டுக்கு வரும் சாலைகளை எந்த நாட்க ளில் ஒரு வழிப்பாதையாக மாற்றலாம் என்றும் ஆலோசனை செய்யப்பட்டது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டியில் இருந்து மலைப் பாதை வழியாக ஏற்காட்டுக்கு வரும் வாகனங்கள், வாழவந்தி, கொட்டசேடு, குப்பனூர் மலைப்பாதை வழியாக செல்ல போக்குவரத்தில் மாற்றம் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. சுற்றுலா பயணி களுக்கு போதிய மருத்துவ வசதிகள் கிடைக்க, ஏற்காட்டில் பொது இடங்க ளில் மருத்துவ முகாம்களை அமைக்க அறிவுறுத்தப்பட்டது.