உதகை, ஏப்.26- கோடை சீசனை முன்னிட்டு நீல கிரி மாவட்டத்தில் மே மாதம் முழு வதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக நீலகிரி மாவட் டம் திகழ்கிறது. இங்கு நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்க பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு சுற்று லாப் பயணிகளுக்காக கோடை விழா நடத்தப்படுகிறது. இந்நிலை யில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி வரு கிற 17 ஆம் தேதியன்று தொடங்க உள்ளது. இதனால் கடந்த ஒரு வார மாக தினமும் 10 ஆயிரத்திற்கு மேற் பட்ட வாகனங்கள் உதகைக்கு வரு கின்றன. இதனால் உதகை – குன் னூர் - மேட்டுப்பாளையம், உதகை நகர் உள்ளிட்ட முக்கிய சாலை களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கோடை சீசனை யொட்டி சனியன்று (இன்று) முதல் மே மாதம் இறுதிவரை நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற் றம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கூடலூரில் இருந்து உதகைக்கு வரும் அரசு பேருந்து தவிர அனைத்து சுற்று லாப் பேருந்துகள், வேன் உள்ளிட்ட வாகனங்கள் எச்பிஎப், கோல்ப்ஸ் சாலை பகுதியில் நிறுத்தப்படும். அதில் வரும் சுற்றுலாப் பயணிகள் அரசு சுற்றுப்பேருந்துகளை பயன் படுத்திக் கொள்ளலாம். மசினகுடியில் இருந்து கல் லட்டி வழியாக உதகை வரும் இலகு ரக வாகனங்கள் தலைக்குந்தா மட்டம், கோழிப்பண்ணை, புது மந்து வழியாக ஸ்டீபன் தேவால யம் வந்தடையும். அதில் தாவர வியல் பூங்கா செல்லும் சுற்றுலாப் பயணிகள் புதுமந்தில் இருந்து வண் டிச்சோலை வழியாக தாவரவியல் பூங்கா வரலாம். மேலும் கூடலூ ரில் இருந்து உதகை படகு இல்லம் மற்றும் கர்நாடகா பூங்கா வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங் கள் பிங்கர்போஸ்டில் இருந்து வலதுபுறம் திரும்பி காந்தல் முக் கோணம் வழியாக படகு இல்ல சாலை மற்றும் கர்நாடகா பூங்கா சாலையை அடையலாம். குன்னூரிலிருந்து உதகை வரும் அரசு பேருந்து தவிர அனைத்து சுற்றுலா பேருந்துகள், வேன்கள், ஆவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து சுற்று லாப் பயணிகள் அரசு சுற்று பேருந்து பயன்படுத்திக் கொள்ள லாம். கோத்தகிரியில் இருந்து உதகை வரும் அனைத்து வாகனங் களும் கட்டபெட்டு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு குன்னூர் வழி யாக வரவேண்டும். மேலும் பால், பெட்ரோலியம், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தி யாவசிய வாகனங்கள் தவிர, இதர அனைத்து கனரக வாகனங்களும் சனி (இன்று), ஞாயிறு (நாளை) மற்றும் கோடை விழாவான மே 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை உதகை நகருக்குள் வர அனு மதி கிடையாது. மேட்டுப்பாளையத் தில் இருந்து உதகை வரும் அனைத்து வாகனங்களும் குன் னூர் வழியாக உதகைக்கும் பின்பு உதகையில் இருந்து மேட்டுப்பா ளையம் செல்லும் அனைத்து வாக னங்களும் கோத்தகிரி வழியாகவும் செல்ல வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.