ஈரோடு, ஆக.23- ஈரோடு கனி மார்க்கெட்டில் உள்ள கடை களை காலிசெய்ய நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து கதவடைப்பு போராட்டம் நடை பெற்றன. ஈரோடு மாநகரில் கனி மார்க்கெட் ஜவுளி சந்தை கடந்த 40 ஆண்டுகளாக செயல் பட்டு வருகிறது. அங்கு 240 தினசரி கடை களும், 720 வாரச்சந்தை கடைகளும் உள்ளன. வாரந்தோறும் செவ்வாயன்று ஜவுளிச்சந்தை கூடுவது வழக்கம். கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கனி மார்க்கெட் வளாகத்தில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்காக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த ஜவுளி கடைகள் அகற்றப்பட்டன. கட்ட டத்தை சுற்றிலும் உள்ள காலி இடத்தில் தற் காலிக கடைகள் அமைத்து கொடுக்கப் பட்டன. சுமார் ரூ.60 கோடி செலவில் 4 தளங் களுடன் 292 கடைகள் கட்டி முடிக்கப் பட்டன. இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதியன்று புதிய வணிக வளாகத்தை திறந்து வைத்தார். அதன்பிறகு பொது ஏலம் விடப்பட்டது. இதில், ஒவ்வொரு கடைக்கும் அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வைப்புத்தொகை யும், குறைந்தபட்சமாக ரூ.31 ஆயிரத்து 500 வாடகையும் நிர்ணயிக்கப்பட்டது. மேலும் ஏலத்தில் எடுக்கப்படும் கடையின் 12 மாத வாடகையை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதில் கடை வாடகையும், வைப்புத் தொகையும் அதிகமாக இருந்ததால் கடை களை ஏலத்தில் எடுக்க வியாபாரிகள் யாரும் முன் வரவில்லை. இதனால் வணிக வளாகம் மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. வாடகையை குறைத்து ஏற்கனவே உள்ள ஜவுளி வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கனி மார்க்கெட் வியாபாரிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதில் புதிய வணிக வளாகத்தை சுற்றி உள்ள கடைகளை வியாபாரிகள் 60 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டு மென்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த கால அவகாசம் திங்களன்று நிறைவ டைந்தது. இந்நிலையில், கடைகளை காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் திங்களன்று ஜவுளி வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதை கண்டித்து கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் இரண்டாவது நாளாக கடையடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஜவுளி வியாபாரி கூறு கையில், அதிகமான வாடகை, வைப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டதால் எங்களால் கடைகளை வாடகைக்கு எடுக்க முடிய வில்லை. கடந்த 40 ஆண்டுகளாக கனி மார்க்கெட் மட்டுமே எங்களது வாழ்வாதார மாக உள்ளது. தற்போது திடீரென காலி செய்ய வேண்டும் என்றால் எங்கு சென்று வியாபாரம் செய்வோம் என்பதே புரிய வில்லை. எனவே வணிக வளாகத்தில் குறைந்த கட்டணத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்றனர்.